தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியலில் மலையாள ஹீரோயின்! அதிர்ந்த தேர்வர்கள்!

Malayalam heroine in the qualifying exam score list! Shocked selectors!

தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியலில் மலையாள ஹீரோயின்! அதிர்ந்த தேர்வர்கள்! அனைத்து துறையினருக்கும் தேர்வு வைப்பதன் காரணம் எவ்வளவு பேர் முயற்சித்தாலும், அதற்கு தகுதி யாருக்கு இருக்கிறதோ அவர்கள் மட்டுமே அதாவது திறமை உள்ளோருக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்பதற்காகதான். ஆனால் வரவர பரிட்சையில் ஆள்மாறாட்டம் செய்வது சகஜமாகி விட்டது. சில அரசு ஊழியர்கள் தன் சொந்த தேவைக்களுக்காக சிலரிடம் பணம் வாங்கிக் கொண்டு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றனர். நீட் தேர்வில் கூட அவ்வளவு சோதனைகளை மீறி … Read more

கங்கையில் மிதந்து வரும் சடலங்கள்! வலை அமைத்த பீகார்!

Corpses floating in the Ganges! Bihar set up the web!

கங்கையில் மிதந்து வரும் சடலங்கள்! வலை அமைத்த பீகார்! கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தினம் தினம் புதிய செய்திகள், மனதை பதைபதைக்க வைக்கின்றன.அதே போல் பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள கங்கை நதியில் கடந்த 10 ம் தேதி 71 உடல்கள் மிதந்து வந்ததை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து அங்கு வந்த அரசு அதிகாரிகள் உடல்களை கைப்பற்றி அடக்கம் … Read more

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி ஏற்க உள்ளார்!

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் இன்று முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார். ஏற்கனவே இவர் மூன்று முறை பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது இவர் நான்காவது முறையாக பீகார் முதலமைச்சர் ஆகிறார். பீகார் மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியில் 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் … Read more

பீகார் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்! பரபரப்பான சூழ்நிலையில் நடந்த முக்கிய திருப்பம்!

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்பான அந்த மாநிலத்தின் கருத்துக்கணிப்புகள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சியில் அமரும் என்று ஆருடம் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனாலும் மக்களோ கருத்துக் கணிப்புக்கு மாறாக சுவையான கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். பீகார் மாநிலம் 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது அந்த மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற்று வந்தது. அங்கே தேர்தல் முடிந்துவிடட நிலையில், செய்தி … Read more

சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டிப்பதாக சுட்டிக்காட்டுகிறார் – பிரதமர் மோடி!

பீகார் மாநிலத்தில் தற்போது தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் மூன்று இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், “சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்”. மேலும் இப்போதாவது காங்கிரஸ் மக்களை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். அத்துடன்  மாநிலங்களவை, மக்களவை ஆகிய இரண்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்.பி கள் கூட இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். பீகார் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவி வரும் இத்தகைய … Read more

வருமான வரித்துறையினரின் திடீர் சோதனை – சிக்கியதா காங்கிரஸ்?

வருமான வரித்துறையினர் திடீரென்று மேற்கொண்ட அதிரடி சோதனையால் ரூபாய் எட்டு லட்சம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது பீகார் மாநிலத்திலுள்ள, பாட்னாவில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து பணம் பறிமுதல். பீகார் மாநிலத்தில் தற்போது தேர்தல் நடந்து வரும் நிலையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், இந்த ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த பணம் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதா? என்ற கோணத்திலும் … Read more

வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலம்: இன்று திறக்கிறார் பிரதமர் மோடி!

பீஹாரில் வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைக்க உள்ளார். பீஹாரில் கோசி ஆற்றுக்கு குறுக்கே 1.9கி.மி நீளத்திற்கு பிரமாண்டமாக ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு 2003 – 2004 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்து 516 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இந்த கோசி ரயில் … Read more

குண்டு வெடித்ததில் சிறுவன் பலி! துப்பாக்கி வைத்து செல்ஃபி எடுத்து விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் !!

குண்டு வெடித்ததில் சிறுவன் பலி! துப்பாக்கி வைத்து செல்ஃபி எடுத்து விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் !! பீகார் மாநிலத்தில் துப்பாக்கியை வைத்து செல்பி எடுக்க முயன்ற சிறுவன், குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் கோபாலகாஞ்ச் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு, பொரியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை எழுதி காத்திருக்கும் 17 வயது சிறுவனுக்கு நேர்ந்துள்ளது. உறவினர்கள் ஒருவரின் துப்பாக்கி கிடைத்தயடுத்து, அதை வைத்து போஸ் கொடுப்பது … Read more

இந்திய மருத்துவர்கள் சங்கம் கொடுத்த அதிர்ச்சி தகவல்.!

  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இதுவரை 21,50,912 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மொத்தமாக 43,446 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 24 மணி நேரத்தில் மட்டும் 886 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல்வேறு … Read more