தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு! மொத்தம் 6 ஆக உயர்வு

Tamil Nadu Government Announces Special Ward for Corona Virus Affected People கொரோனா வைரஸ்

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு! மொத்தம் 6 ஆக உயர்வு உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை தடுக்க பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 275 ஆக உள்ளது. இதேபோன்று தென்கொரியா, சிங்கப்பூர். பாகிஸ்தான், மெக்சிகோ மொரிஷியஸ் நாடுகளில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர். … Read more

பிரதமர் மோடியின் அறிவிப்பினை மக்கள் கடைபிடிக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

பிரதமர் மோடியின் அறிவிப்பினை மக்கள் கடைபிடிக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை . இந்தியாவில் இதுவரை 298 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது .அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணில் வைக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து கொரோனா பரவுதலை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்காகவும் பிரதமர் மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பினை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் … Read more

எச்சரிக்கையுடன் இருங்கள் கொரோனாவிடம் இருந்து மட்டுமல்ல திருடர்களிடமும் தான் : அரசு அறிவுறுத்தல்!

உலகம் முழுவதும் பரவி அனைவரையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழ்நாட்டிலும் பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு சுகாதார துறையுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகம், திரையரங்கம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களை மூட அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.மேலும் பொது மக்கள் தேவை இன்றி வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பாரத பிரதமர் மோடி 22 மார்ச் ஞாயிறு அன்று மக்கள் ஊரடங்கிற்கு … Read more

பொறுப்புணர்வை நிருபிக்கும் நேரமில்லை; சவாலை முறியடிக்கும் நேரம்: அரசுகளை கடிந்து கொண்ட மூத்த தலைவர்!

நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்ற வாய்ப்புள்ளதால் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொடர்களை ஒத்தி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், நடாளுமன்றம் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத் தொடர்கள் ஒத்திவைக்கப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற, சட்டமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற … Read more

கொரோனா பீதியில் மாஸ்க் அணிந்துகொண்டு நூதனமாக புகைபிடிக்கும் வாலிபர் : வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ!

கொரோனா நோய் பரவல் காரணமாக உலகமே பீதியில் ஆழ்ந்துள்ளது, இதனால் பல்வேறு நாடுகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உலக நாடுகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 2 லட்சத்து ௭௭ ஆயிரத்தை கடந்துள்ளது, இதில் 11 ஆயிரத்து 474 பேர் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நோய் தொற்றில் இருந்து எவ்வாறெல்லாம் நம்மை தற்காத்து கொள்வது என்று உலக நாடுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதை பார்த்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள செய்யும் … Read more

அரசு உத்தரவை மீறி வணிக வளாகத்தை திறந்த துணிக்கடை நிறுவணம் : விசாரித்த அதிகாரியை மிரட்டி ஆபாச வார்த்தைகளால் திட்டிய மேலாளர்!

பல நாட்டுகளில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160 தாண்டி வேகமாக உயர்ந்து வருகிறது. வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 15 நபர்கள் முழுவதும் குணமடைந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் அதிகம் கூடும் வணிக … Read more

செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு – வெளியானது அதிரடி உத்தரவு!

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. நாடு முழுவதும் 160 க்கும் மேற்பட்டோர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை 3 நபர்கள் பல்வேறு காரணங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர், மேலும் 15 பெயர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், … Read more

10 அல்லது அதற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்யும் வணிகவளாகங்களை மூடுங்கள் : மாவட்ட ஆட்சியர் அதிரடி!

சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று இத்தாலி தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் வணிகவளாகம், பூங்கா, திரையரங்கம் உள்ளிட்ட இடங்களை மூட தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட … Read more

கொரோனா பீதி கடலூர் மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை : அடுத்தடுத்து நடவடிக்கை!

உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது. இதனால் தமிழக அரசு மற்றும் சுகாதார துறையும் இனைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. இதனை அடுத்து பெருநகரங்களில் பொது மக்கள் அதிகம் கூடும் வணிகவளாகம், பூங்கா, தியேட்டர் உள்ளிட்ட இடங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று அபாயம் இன்னும் குறையவில்லை என்பதால் மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதனால் கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக கடலூர் மற்றும் … Read more