முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கு! எதிர்க்கட்சித் தலைவருக்கு வந்த புது சிக்கல்!

சமீபத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் துணை நடிகை சாந்தினி அவர்களுடன் திருமணம் செய்யாமல் கடந்த ஐந்து வருடகாலமாக வாழ்க்கை நடத்தி வந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு மூன்று முறை கருக்கலைப்பு செய்திருக்கிறார் என்று துணை நடிகை சாந்தினி காவல்துறையில் புகார் அளித்தார்.அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மிகத் தீவிரமாகத் தேடத் தொடங்கினார்கள். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக … Read more

எதிர்க்கட்சித் துணைத் தலைவரானார் ஓபிஎஸ்!

எதிர்வரும் 21ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற இருக்கின்ற நிலையில், அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் இன்றைய தினம் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் பொருளாளர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றிய சூழலில் தற்போது துணை தலைவர் … Read more

ஓபிஎஸ் இபிஎஸ் இடையே மீண்டும் உருவான போஸ்டர் யுத்தம்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 65 இடங்களில் மட்டுமே வெற்றி அடைந்தது. பல இடங்களில் தோல்வியை சந்தித்திருக்கிறது அந்தக் கட்சி. தென்மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்வி மற்றும் டெல்டா மாவட்டங்களில் உண்டான தோல்வியும் அதோடு தலைநகர் சென்னையில் ஏற்பட்ட தோல்வியும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிமுக ஆளுங்கட்சியாக வராவிட்டாலும் கூட பலமான எதிர்க்கட்சியாக அமர்வதற்க்கான அந்தஸ்தைப் பெற்றது. இந்தநிலையில், அடுத்தது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற விவகாரத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நேரடியான மோதல் உண்டானது. … Read more

ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து வெளியிட்ட அதிரடி உத்தரவு!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான திரு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்ட இருக்கின்ற ஒரு அறிக்கையில் சட்டசபை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வருகின்ற 14ஆம் தேதி பகல் 12 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அவ்வை சண்முகம் சாலையில் இருக்கின்ற தலைமை கழகத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் திரு பன்னீர்செல்வம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற இருக்கிற … Read more

அதிமுக தலைவிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்! அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 67 இடங்களில் மட்டுமே வெற்றி அடைந்தது .அந்த கட்சி இடங்களில் தோல்வி அடைந்து விட்டது. அந்த கட்சி தென் மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்வியும், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்வியும், முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கிறார்கள். அந்த சமயத்தில் மிக அதிக சட்டசபை உறுப்பினர்கள் ஆதரவு இருந்ததால் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு … Read more

சசிகலாவை நெருங்கிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் இபிஎஸ்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான முன்னாள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கடந்த 10 வருடகாலமாக சென்னை பசுமை வழி சாலை யில் இருந்த அரசு இல்லமான தென்பெண்ணை இல்லத்தில் வசித்து வந்தார். அவர் தற்போதைய சட்டமன்ற கட்சி தலைவராக அதாவது எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் அவருடைய அரசு இல்லத்தில் தொடர்ச்சியாக வசிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கும் என்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவரே தொடர்ச்சியாக அரசு இல்லத்தில் தங்கி இருக்கிறார். ஆகவே … Read more

அதிமுகவில் விரைவில் ஏற்படவிருக்கும் அதிரடி மாற்றம்! யார் தெரியுமா?

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்திருக்கிறது ஆனாலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. இருந்தாலும் அந்த கட்சியின் தலைமை கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தோல்வியை முன்னிட்டு அந்த கட்சி இரு தலைவர்களுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் வெடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சசிகலா காய் நகர்த்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.சட்டசபை உறுப்பினர்களிடையே ஒற்றுமை இல்லை என்று சொல்லப்படுகிறது. தலைமையும் மோதல், முன்னாள் தலைவர்களுக்கு பாதுகாப்பு … Read more

காலியாகும் அதிமுக கூடாரம்? அதிர்ச்சியில் தலைமை!

அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது ஆனாலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. இருந்தாலும் அந்த கட்சியின் தலைமை கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தோல்வியை தொடர்ந்து பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் இடையே மறுபடியும் பனிப்போர் வெடித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக தெரிவிக்கப்படுவது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி தான் என்று சொல்லப்படுகிறது. அதனை பொது மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை அதிலும் குறிப்பாக சிறுபான்மையினருக்கு இது … Read more

எதிர்க்கட்சித் தலைவர் தமிழக அரசுக்கு வழங்கிய முக்கிய ஆலோசனை!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழவிச்சாமி வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில் அதிமுகவைப் பொறுத்தவரையில் மக்களின் நலனே முக்கியமானது. 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் 14 நல வாரியங்களை விசாரணை 35 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு அம்மா ஆட்சியில் வழங்கப்பட்டது போல அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் நிவாரண உதவியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். என்னுடைய தலைமையிலான அம்மாவின் அரசு வழங்கியது … Read more

அணி மாறும் முன்னாள் அமைச்சர்கள்! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவில் சமீபகாலமாக ஒரு சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மத்திய அரசின் நெருக்கடி காரணமாக தான் முன்னாள் அமைச்சர்கள் வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி அணுகுமுறை மற்றும் வியூகங்கள் காரணமாக தங்களுக்கு எந்த விதமான லாபமும் இல்லை என்று நினைக்கின்றனர் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள். என்று சொல்லப்படுகிறது. இதன் மூலமாக ஓ பன்னீர்செல்வம் வழியாக சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கான முயற்சியில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக எடப்பாடி … Read more