மீண்டும் ஊரடங்கு அமல்!அதிரடி உத்தரவு!

Curfew enforced again! Action Order!

மீண்டும் ஊரடங்கு அமல்!அதிரடி உத்தரவு! சீனாவில் இருந்து விருந்தாளியாக வந்த கொரோனா ஒரு வருடம் இங்கேயே தங்கி பல உயிர்களை காவு வாங்கியது.இதனையடுத்து இயல்பு நிலைக்கு இப்போது திரும்பி கொண்டிருக்கும் மக்களுக்கு பேரதிர்ச்சியாக மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சில காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இந்நிலையில் அதை கட்டு படுத்தும் விதமாக இரவு நேரம் பொது முடக்கத்தை அறிவித்துள்ளனர்.நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் 4 ஆயிரத்து 787 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு … Read more

முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை..! பண்டிகையை முன்னிட்டு மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா..?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்..!!

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து வரும் 28ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. வரும் 31ம் … Read more

செப்டம்பர் 25ஆம் தேதி முதல் மீண்டும் பொதுமுடக்கமா:? மத்திய அரசின் விளக்கம்!

செப்டம்பர் 25ஆம் தேதி முதல் மீண்டும் பொதுமுடக்கமா:? மத்திய அரசின் விளக்கம்!   இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.எனினும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு கட்டங்களிலும் பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அளித்து வந்தன. இந்நிலையில்,செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நான்காம் கட்ட ஊரடங்கு மத்திய அரசால் பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் போக்குவரத்து இயக்கம்,வழிபாட்டு தளங்கள் … Read more

இனி மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்!

இனி மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்! கொரோனா பொது முடக்கத்தில்,மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகளால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.தற்போது வரை இந்தியாவில் 49 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே தற்போது படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில், மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதினால் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்படி … Read more

ஊரடங்கை மீறி கட்சி கூட்டம் நடத்தி பார்ட்டி வைத்த திமுக எம்.பி உட்பட 317 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு!!

கொரோனா தொற்று ஊரடங்கில் விதிமுறைகளை மீறி கட்சியில் கூட்டம் நடத்தியதாக, திமுக பொன்முடி மற்றும் அதிமுக முன்னாள் எம்பி உள்ளிட்ட 317 பேர் மீது காவல்துறை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.   கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.   இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் சில தளர்வுகள் உடன் அரசு அமல்படுத்தி வருகிறது. இதில் தற்போது நான்காம் கட்ட … Read more

“அனைத்தையும் தளர்த்திய பிறகும் எதற்கு மீண்டும் ஊரடங்கு?” மத்திய மாநில அரசுகளுக்கு கனிமொழி சரமாரி கேள்வி

ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்வதற்கு எந்த தடையும் இல்லை என அறிவித்த பிறகு, எதற்கு மீண்டும் ஊரடங்கு வேண்டும்? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.   கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூத்துக்குடி அத்தைக்கொண்டான் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.   அப்போது அவர் கூறியதாவது, “மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என திமுக போராடி … Read more

இன்று முதல் மூடப்படுகின்றது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் மூடப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு ஊரடங்கு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் தினமும் 120 முகாம் நடத்தி அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை சேலம் மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சளிப் பரிசோதனை ஏற்பட்டு அந்த முடிவுகள் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரிடை உதவி மையம் … Read more

லாக் டவுனுக்கு பிறகு ஆளே மாறிய நடிகை லட்சுமிமேனன்!! செம வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலம் வித்தியாசமான மலைவாழ் பெண் போன்ற தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்திய நடிகை லட்சுமிமேனன்,அந்தப் படத்திற்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானார். காலகட்டத்தில் நடிகர் நடிகைகள் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் உலா வரவிடுகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகை லட்சுமி மேனனும் தனது அழகு கொஞ்சும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் யாருடா இந்த பொண்ணு??.. இவ்வளவு அழகா.. என்று அவருடைய அழகை வர்ணித்து … Read more

பொது முடக்கத்தையும் போக்குவரத்து தடையையும் நீக்க வேண்டும் என வைகோ கோரிக்கை

Vaiko-News4 Tamil Online Tamil News1

தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள பொது முடக்கத்தையும்,போக்குவரத்து தடையையும் நீக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கின்றது. வருமானத்திற்கு வழியின்றி பட்டினி கிடக்க நேர்ந்தபோதிலும், அரசுக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே உதவித்தொகையாக அளித்தது. நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கியது. ஆனால், … Read more

விநாயகர் சதுர்த்தி அன்று தடையை மீறி ஊர்வலம் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்?

நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வலம் எடுத்துச் செல்லவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் பத்திரிக்கையாளர் அன்பழகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதாக கூறியுள்ளதை சுட்டிக்காட்டி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். தடையை மீறி விநாயகர் சிலைகளை … Read more