ரூ. 2000 நிவாரணம் இன்னும் வாங்கலையா? இந்த மாதம் வாங்கிக்கலாம்!

முதல்வர் ஸ்டாலின் கொடுத்த கொரோனா நிவாரண உதவி தொகை 2000 ரூபாயை கடந்த மாதத்தில் வாங்காதவர்கள் இந்த மாதம் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதன் தொடர்பாக அரசு வெளியிட்ட செய்தியில், தமிழகத்தில் மொத்தம் 2.09 கோடி அரிசி ரேஷன் கார்டுளுக்கு மே 15 முதல் நிவாரண தொகை முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது. நேற்றுவரை 98.4 சதவீதம் குடும்பத்தினர் உதவி தொகை பெற்று உள்ளனர். மீதம் இருக்கின்ற குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, … Read more

கலெக்டர்களுக்கு 3 விஷயம் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

கோவையில் 5 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மூன்று முக்கியமான விஷயங்களை கலெக்டர்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் சென்னையை விட கோவை திருப்பூர் ஈரோடு சேலம் கரூர் போன்ற ஐந்து மாவட்டங்களில் கொரோணா தொற்று அதிகமாக பரவி வருகிறது. மேலும் உயிர் பலியும் இந்த ஐந்து மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. அதனால் தொற்று பரவலை கட்டுபடுத்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஐந்து மாவட்ட … Read more

இவர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை! முதலமைச்சர் அறிவிப்பு! அதுமட்டுமல்ல இன்னும் பல சலுகைகள்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மாத வருமானம் இன்றி வேலை புரியும் பணியாளர்களுக்கு உதவி தொகையாக ரூ 4000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி எந்த சமய அறநிலை துறை அமைச்சர் பிகே சேகர் பாபுவும் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் பெரும் தொற்றினால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலில் பணி புரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள் ஆகியோரும் மக்கள் யாரும் கோயிலுக்கு வராததால் வருமானம் இன்றி தவித்து வரும் நிலையை அறிந்து … Read more

“ஆஸ்பத்திரிக்கு இலவசம்” உண்மையான மாணிக்கம் இவர்தான்!

மதுரையில் ஆட்டோ காரர் ஒருவர் மருத்துவ அவசரத்திற்கு இலவசமாக ஏழை எளிய மக்களுக்கு ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல் சேவை செய்து வருகிறார். பாஷா திரைப்படத்தில் வெளிவந்த பாடலைப்போல நடைமுறையில் அதனை வழிநடத்தி உண்மையான மாணிக்கமாக வாழ்ந்து வருகிறார். மதுரையை சேர்ந்த லட்சுமணன். இங்கு கொரோனா காலத்தில் பொருளாதார அடிப்படையில் எல்லோரும் முடங்கிப் போய் இருக்கிறார்கள். அனைத்து ஓட்டுநர்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் சரி இந்த ஒரு பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறார்கள். லட்சுமணன் மூன்று குழந்தைகளையும் வேலைக்குச் … Read more

தடுப்பூசிகள் போதுமான கையிருப்பு இல்லை! சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவு குறைந்து வரும் நிலையிலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசிகள் இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட கொரோனா மையத்தில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள … Read more

வித்யாஷ்ரம் பள்ளி மீது 900 முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்!

சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மீது 900 முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். சென்னையில் உள்ள அண்ணாமலை புரம் பகுதியில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என முன்னாள் மாணவர்கள் 900 மேற்பட்டோர் கையெழுத்திட்டு புகார் அளித்துள்ளனர். கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் கொடுத்த நிலையில் … Read more

இந்தியன் 2 பேச்சுவார்த்தை ! நீதிமன்றம் முடிவை எதிர்ப்பார்க்கும் படக்குழு!

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் பலர் நடித்து வரும் படம் தான் இந்தியன் 2. இந்த படம் தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு எந்த படத்தையும் இயக்க செல்லக்கூடாது என்று லைகா தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பின்னர் லைகா மற்றும் இயக்குனருடன் எவ்வளவு பேச்சுவார்த்தை நடந்த பின்னரும் பயனளிக்காமல் மீண்டும் நீதிமன்றத்தையே படக்குழுவினர் நாடி உள்ளனர். தேர்தல் முடிவுகள் … Read more

தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்ய வேண்டும் என மது கடை உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் தொற்று குறைந்த எண்ணிக்கையில் பாதிப்படைந்துள்ளது. கேரளா தமிழ்நாடு கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மட்டுமே சற்று அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒரு சில தினங்களாக குறைந்து வருவதை காணலாம். இந்நிலையில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு மத்திய அரசு … Read more

ஒரு சில தளர்வுகள் உடன் இன்று முதல் இவை இயங்க அனுமதி!

தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கில் மேலும் ஒரு சில துறைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் ஜூன் 7ம் தேதி மாலை 6 மணி வரை ஊரடங்கு போடப்பட்டதால் கோயம்பேடு மற்றும் சுற்றுப் பகுதிகளில் காய்கறி பூ சந்தைகள் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்த காய்கறி பூ சந்தைகளுக்கும் மட்டுமே அனுமதி கிடைத்த நிலையில், சில்லரை வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே, விமானம் மற்றும் துறைமுகங்களில் … Read more

ஆயிரக்கணக்கில் செத்துக் கிடக்கும் மீன்கள்! துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கடத்தூர் இல் அய்யனார் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது, என அதை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் கடத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையின் வலது புறத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அய்யனார் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிதான் நிலத்தடி நீர் கிடைக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது.இது கடத்தூர் பேரூராட்சி நிர்வாகத்தின் … Read more