வித்யாஷ்ரம் பள்ளி மீது 900 முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்!

0
68

சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மீது 900 முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

சென்னையில் உள்ள அண்ணாமலை புரம் பகுதியில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என முன்னாள் மாணவர்கள் 900 மேற்பட்டோர் கையெழுத்திட்டு புகார் அளித்துள்ளனர்.

கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் கொடுத்த நிலையில் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும், செயின்ட் ஜார்ஜ் பள்ளிகளிலும் பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அந்த பள்ளிகளுக்கு குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் அந்த பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி 900 மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்டு புகார் அளித்துள்ளனர்.
900- க்கும் மேற்பட்ட வித்யாஷ்ரம் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையருக்கு புகார் அளித்துள்ள நிலையில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில், பாலியல் ரீதியாகவும் உடல் அமைப்பு பற்றியும் கெட்ட வார்த்தைகளால் திட்டியும் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பல ஆண்டுகளாக புகார் அளித்த நிலையும் நிர்வாகம் எந்த ஒரு உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை, என்பது கண்டனம். ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத பலரின் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் கூட இதுவரைக்கும் எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை.

இதுபோன்ற குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியர்கள் மீது தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல பாதிக்கப்பட்ட மாணவர்களையும் அழைத்து தேவையான ஆலோசனை வழங்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பள்ளி நிர்வாகம் முழு பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும், பழைய புகார்கள் இருந்தாலும் அதைப் பற்றியும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் மாணவர்களின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும் ஜூன் 8-ஆம் தேதி விசாரணைக்கு வரவேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Kowsalya