முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி காலமானார்!

முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி (வயது 92) இன்று காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் அய்யலுசாமி பெருமாள்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவர், நில அடமான வங்கியின் கூட்டுறவு தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் போன்ற பல பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், 1996 முதல் 2001 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி … Read more

புதிய பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் அறிவிப்பு !!

புதிய பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் அறிவிப்பு !!

இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட  மாவட்டங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகளில் விவரங்கள் குறித்து  தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில்  வருகின்ற 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ,தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் புதியதாக பிடிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கீழ் இயங்கி வரும் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிரித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தொகுதிகளின் மாவட்ட வாரியான விபரங்கள் ; காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), … Read more

மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு !!

மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு !!

வரும் நவம்பர் 9-ஆம் தேதி 11 மாநிலங்களவை தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 10 நபர்கள் மற்றும் உத்தரகண்டிலிருந்து ஒரு ராஜ்யசபா எம்பி-யின் பதவிக்காலனாது, வரும் நவம்பர் மாதம் 25-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. பதவிகாலம் ம முடிவடைவதற்கு முன்பாகவே தேர்வு நடத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும் சந்திரபால் சிங் யாதவ், அருண் சிங், ஜாவேத் அலிகான், … Read more

சர்ச்சையை ஏற்படுத்திய டெனால்டு டிரம்ப்! முக கவசத்தை தவிர்த்தது ஏன்?

சர்ச்சையை ஏற்படுத்திய டெனால்டு டிரம்ப்! முக கவசத்தை தவிர்த்தது ஏன்?

இதுவரை கொரோனா நோய்க்கு பல உலக நாடுகளே லட்சக்கணக்கில் மக்களை இழந்து வரும் நிலையில், அமெரிக்காவில் 2,09,000 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு கடும் பரபரப்பும் மற்றும் மக்கள் பயத்துடன் இருக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். 4 நாட்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் இருந்த டிரம்ப் இன்னும் கொரோனா தொற்று முழுமையாக குணமடையாத நிலையில் நேற்று அவர் … Read more

அரசியலில் இறங்க வேண்டாம்!  ரஜினியை பற்றி சீமான் அளித்துள்ள காரசாரமான பேட்டி!

அரசியலில் இறங்க வேண்டாம்!  ரஜினியை பற்றி சீமான் அளித்துள்ள காரசாரமான பேட்டி!

சென்னை அம்பத்தூரில் TTP காலனி பகுதியிலுள்ள சதா குள கரையில் 10 லட்சம் பனை மரங்களை நடும் நிகழ்ச்சியை தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பாக நடைபெற்ற பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் “ ஒரு மனிதனுக்கு 422 மரங்கள் அவசியம். 1.5 கோடி தொண்டர்களை கொண்டிருக்கும் கட்சி ஏன் மரத்தை நட முயற்சி செய்யவில்லை. ராமன் கோயிலுக்கு கல்லெடுத்து வர சொன்ன பிரதமர் மரம் நட ஏன் சொல்லித் தரவில்லை. அதேபோல் … Read more

5 மணிநேர காரசார விவாதம்:! முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸா? இபிஎஸா?

5 மணிநேர காரசார விவாதம்:! முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸா? இபிஎஸா?

5 மணிநேர காரசார விவாதம்:! முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸா? இபிஎஸா? சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக கட்சியில்,முதல் வேட்பாளர் யாரென்றும் கட்சியின் பொதுச்செயலாளர் யாரென்றும் பெரிய குழப்பநிலை நிலவி வருகின்றது.சமீபத்தில்அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சசிகலா விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்கூட்டத்தில்,முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி செயற்குழு கூட்டத்தை நடத்துவது என முடிவு … Read more

இடைத் தேர்தல் குறித்த விரைவில் முடிவு எட்டப்படும் :! தேசிய தேர்தல் ஆணையம் தகவல்

இடைத் தேர்தல் குறித்த விரைவில் முடிவு எட்டப்படும் :! தேசிய தேர்தல் ஆணையம் தகவல்

வரும் 29- ஆம் தேதி காலியாக உள்ள ஒரு மக்களவைத் தொகுதிகளுக்கும்  மற்றும் 64 பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தேசிய தேர்வு ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் விவகாரங்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரி சுனில் அரோரா, கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அவர் பேசியுள்ளார். ஒரு மக்களவைத் தொகுதியில் மற்றும் பல்வேறு மாநிலங்களில் 64 பேரவைத் தொகுதிகள் … Read more

ஹரிவன்ஸ் குறித்து சரத்பவார் வேதனை!இதுபோன்ற அவை தலைவரை ஐம்பதுக்கு ஐம்பது ஆண்டுகால அரசியலில் கண்டதே இல்லை என விமர்சனம்!

ஹரிவன்ஸ் குறித்து சரத்பவார் வேதனை!இதுபோன்ற அவை தலைவரை ஐம்பதுக்கு ஐம்பது ஆண்டுகால அரசியலில் கண்டதே இல்லை என விமர்சனம்!

மத்திய அரசு கொண்டு வந்த இரு மசோதாக்கள் மாநிலங்களவையில் ஞாயிறு அன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.இதற்கு எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்பினை தெரிவித்தனர். மேலும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.அமளியில் ஈடுபட்ட எம்பிகளின் மீது உரிமை மீறல் சட்டம் பாய்ந்தது.  மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க் கட்சி எம்பிக்கள் காகிதங்களை கழித்து அவையின் துணை தலைவர் ஹரிவன்ஸ் மீது ஏறிய முயன்றதால் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.மேலும் அமளியில் ஈடுபட்ட எம்பிக்கள் மழைக்காலக் … Read more

“நாளைய முதல்வரே” எம்ஜிஆர்- விஜய் படத்துடன் சர்ச்சையைக் கிளப்பும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு!

"நாளைய முதல்வரே" எம்ஜிஆர்- விஜய் படத்துடன் சர்ச்சையைக் கிளப்பும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு!

“நாளைய முதல்வரே” எம்ஜிஆர்- விஜய் படத்துடன் சர்ச்சையைக் கிளப்பும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு! சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில்,அதற்கு ஏற்ற வேலைகள் அனைத்துக் கட்சிகளிலும் முழுமும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழுப்புரத்தில், எம்ஜிஆர் படத்துடன் தமிழ்நாட்டின் முன்னணி நடிகரான விஜய் படத்தை சித்தரித்து,விஜய் ரசிகர்களால் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த சுவரொட்டியில் மக்கள் நலன் காக்க, மாணவர்கள் குறைதீர்க்க தமிழ்நாடு வேலை தமிழ்நாடு மக்களுக்கு கிடைக்க நாடே எதிர்பார்க்கும் நாளைய முதல்வர் உங்கள் ஆட்சிக்காக … Read more

#கப்புல் சேலஞ்ச்! 28 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 67 வயது திமுக நிர்வாகி!

#கப்புல் சேலஞ்ச்! 28 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 67 வயது திமுக நிர்வாகி!

#கப்புல் சேலஞ்ச்! 28 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 67 வயது திமுக நிர்வாகி! திருவண்ணாமலை சவால்பூண்டியைச் சேர்ந்த மா.சுந்தரேசன் என்பவர் பல ஆண்டுகளாக திமுகவின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளார்.67 வயதாகும் இவர் எ.வ.வேலுவின் தீவிர விசுவாசியாவார்.தற்போது இவர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளராக உள்ளார். “சவால்பூண்டி சங்கப்பலகை” என்னும் அமைப்பை உருவாக்கி அதில் பல பேச்சாளர்களையும் உருவாக்கி வருகின்றார்.சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையைச் சேர்ந்த 28 வயதான பெண் அபிதா என்பவர் பேச்சாளராக … Read more