• Home
News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports
keep your memories alive
Home » Remedy for dark circles
Tag:

Remedy for dark circles

Beauty TipsLife StyleNews

கண்ணை சுற்றி இருக்கும் அசிங்கமான கருப்பு நீங்க இதை ட்ரை பண்ணுங்கள்! 15 நிமிடத்தில் ரிசல்ட் கிடைத்துவிடும்!

by Divya January 10, 2024
written by Divya

கண்ணை சுற்றி இருக்கும் அசிங்கமான கருப்பு நீங்க இதை ட்ரை பண்ணுங்கள்! 15 நிமிடத்தில் ரிசல்ட் கிடைத்துவிடும்!

அதிக நேரம் மொபைல் போன், லேப்டப் பார்ப்பதால் கண்களுக்கு கீழ் கருவையமானது எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதனால் முகம் தனது இயற்கை அழகை இழந்து நம்மை சோர்வாக காண்பிக்கும்.

இந்த கருவளையத்தை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை மட்டும் முயற்சித்து வந்தால் போதும். சில தினங்களில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

*கற்றாழை மடல் – 1
*சோள மாவு – 1 ஸ்பூன்
*எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

செய்முறை…

ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை பாத்திரத்திற்கு மாற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவு சோள மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்து கொதித்து கொண்டிருக்கும் கற்றாழை பேஸ்ட்டில் ஊற்றி கலக்கி விடவும். கற்றாழை கலவை நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து அதில் 2 ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு கலந்து ஆற விடவும்.

பின்னர் இதை ஒரு டப்பாவில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும். இந்த க்ரீமை கண் கருவளையம் உள்ள இடத்தில் தடவி மஜாஜ் செய்து சில நிமிடங்களுக்கு பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வந்தால் முகம் கருவளையம் நீங்கிவிடும். இந்த க்ரீம் முகத்தில் உள்ள பருக்களை நீக்கவும் உதவும்.

தேவைப்படும் பொருட்கள்:-

*உருளைக்கிழங்கு – 1
*கற்றாழை ஜெல் – 1/4 ஸ்பூன்

செய்முறை…

ஒரு உருளைக்கிழங்கை தோல் நீக்கி காய் சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும். பின்னர் ஒரு வடிகட்டி கொண்டு உருளைக்கிழங்கில் உள்ள சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து அதில் 1/4 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து பேஸ்டாக்கி கொள்ளவும்.
இதை கண்களை சுற்றி அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வந்தால் கருவளையம் சில தினங்களில் கருவளையம் நீங்கிவிடும்.

January 10, 2024 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Beauty TipsLife StyleNews

முக அழகை கெடுக்கும் கருவளையம் ஒரே நாளில் மாயமாக இதை ட்ரை பண்ணுங்க..!!

by Divya December 21, 2023
written by Divya

முக அழகை கெடுக்கும் கருவளையம் ஒரே நாளில் மாயமாக இதை ட்ரை பண்ணுங்க..!!

இன்றைய நவீன உலகில் அனைவரும் மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்தி வருகிறோம். இதனால் கண் தொடர்பான பாதிப்பு அதிகமாகி வருகிறது. அதிலும் கருவளையம் வந்து விட்டால் அவை நம் முக அழகை கெடுக்கும் விதமாக மாறிவிடுகிறது. இந்த கருவளையத்தை சரி செய்ய இயற்கை வழிகளை பின்பற்றுவது நல்லது.

தேவையான பொருட்கள்:-

*ஆவாரம்பூ பொடி – 2 தேக்கரண்டி

*மைசூர் பருப்பு பொடி – 2 தேக்கரண்டி

*பாதாம் எண்ணெய் – 1 தேக்கரண்டி

*கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி

*உருளைக்கிழங்கு – பாதி

செய்முறை…

முதலில் பாதி உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்த உருளைக்கிழங்கில் இருந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அதில் 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்னர் 2 தேக்கரண்டி ஆவாரம் பூ பொடி, 2 தேக்கரண்டி மைசூர் பருப்பு பொடி, 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.

இந்த பேஸ்டை இரவு தூங்குவதற்கு முன் கண்களை சுற்றி அப்ளை செய்து கொள்ளவும். மறுநாள் காலையில் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் ஒரு வாரத்தில் கண்களை சுற்றி இருந்த கருவளையம் மறைந்து விடும்.

December 21, 2023 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Beauty TipsLife StyleNews

முக அழகை கெடுக்கும் கருவளையங்கள் ஒரே வாரத்தில் மறைய “தேன் + மஞ்சள்” பயன்படுத்துங்கள் போதும்..!!

by Divya November 30, 2023
written by Divya

முக அழகை கெடுக்கும் கருவளையங்கள் ஒரே வாரத்தில் மறைய “தேன் + மஞ்சள்” பயன்படுத்துங்கள் போதும்..!!

நம் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று கருவளையம். இதனால் முக அழகு கெடுவதோடு முகம் பொலிவற்று காணப்படும்.

கண் கருவளையம் ஏற்படக் காரணங்கள்:-

**அதிக வேலை சுமை

**முறையற்ற தூக்கம்

**வயது மூப்பு

**ஊட்டச்சத்து குறைபாடு

தேவையான பொருட்கள்:-

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*தேன் – 1 தேக்கரண்டி

*பால் – 1 தேக்கரண்டி

*காபித் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் முகத்திற்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி மற்றும் காபித் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும். அடுத்து 1 தேக்கரண்டி அளவு தூயத் தேன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பிறகு 1 தேக்கரண்டி பால் சேர்த்து நன்கு குழப்பி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும். இதை கண் கருவளையத்தின் மீது போட்டு நன்கு மஜாஜ் செய்து கொள்ளவும். அரை மணி நேரத்திற்கு பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கண்களுக்கு கீழ் காணப்படும் அசிங்கமான கருவளையம் சில நாட்களில் மறைந்துவிடும். இதற்காக நாம் பயன்படுத்தும் பொருட்களால் நமக்கு எந்த இரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

November 30, 2023 0 comments
0 FacebookTwitterPinterestEmail

Recent News

  • ரேஷன் அட்டையில் இந்த எழுத்து இருக்கா; அரசு சொன்ன ஷாக் நியூஸ்!
  • பள்ளி மாணவர்களுக்கு பறந்த உத்தரவு; இனி இப்படி பண்ணா சிறுவர் சீர்திருத்த பள்ளி தான் கதி!
  • அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையா; இந்த சான்றிதழ் உடனே உங்க கையில் கிடைக்கும்!

Category

  • Asia Cup 2022
  • Astrology
  • Beauty Tips
  • Breaking News
  • Business
  • Celebrity Diwali
  • Chandrayaan-3
  • Chennai
  • Cinema
  • Coimbatore
  • Crime
  • District News
  • Diwali Celebration
  • Diwali History
  • Diwali Recipe
  • Editorial
  • Education
  • Employment
  • Entertainment
  • FIFA World Cup 2022
  • Health Tips
  • International Girl Child Day 2022
  • IPL 2023
  • IPL 2025
  • IPL Mini Auction 2023
  • Life Style
  • Madurai
  • Mental Health Day 2022
  • National
  • News
  • Opinion
  • Politics
  • Religion
  • Salem
  • Sports
  • State
  • T20 World Cup
  • Technology
  • Tiruchirappalli
  • TV Shows
  • Uncategorized
  • Union Budget 2025
  • Women's Equality Day
  • World
  • Facebook
  • Twitter

@2021 - All Right Reserved. Designed and Developed by PenciDesign


Back To Top
News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports
  • Home