இந்த வருட ஐபிஎல் தொடரில் கோலியால் சிறப்பாக செயல்பட முடியுமா?

இந்த வருட ஐபிஎல் தொடரில் கோலியால் சிறப்பாக செயல்பட முடியுமா?

இந்த வருடம் ஐபிஎல் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.  போட்டி அங்கு நடந்தாலும் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடிய மைதானத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டி  ரசிகர்களின் சத்தம் அவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். ஆனால் இந்த முறை ஒரு கைதட்டல் கூட கிடைக்க பெற முடியாத நிலையில் வீரர்கள் உள்ளனர். இதுகுறித்து நியூசிலாந்து அணி யின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஸ்காட் ஸ்டைரிஸ் வெளிநாட்டு வீரர்கள் … Read more

ஆறுதல் வெற்றியாவது பெறுமா ஆஸ்திரேலியா அணி

ஆறுதல் வெற்றியாவது பெறுமா ஆஸ்திரேலியா அணி

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய ஆபத்தை உண்டாக்கி வந்த நிலையில் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டு வந்தன. அந்த வகையில் விளையாட்டு துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டன.  கடந்த மார்ச் மாதத்தில் இருந்து எந்த வித போட்டியும் நடைபெறவில்லை. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து – பாகிஸ்தான் தொடர் ஏற்கனவே முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடி வருகிறது. … Read more

சுழல் பந்து வீச்சாளரானா சுனில் நரைன் இப்படிப்பட்டவரா?

சுழல் பந்து வீச்சாளரானா சுனில் நரைன் இப்படிப்பட்டவரா?

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த சுழல் பந்து வீச்சாளராக திகழ்ந்து வருபவர் சுனில் நரைன் இவரின் பந்துவீச்சை எதிர்கொள்வது சவாலாக இருக்கும். இதுகுறித்து இந்திய முன்னாள் தொடக்க வீரர் மற்றும் கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனுமான கவுதம் கம்பிர் பேசும்போது இவரின் பந்து வீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள்  மேலும் பந்தை மறைத்து வைத்து பந்து வீசும்போது, அது பேட்ஸ்மேன்களுக்கு கூடுதலாக கஷ்டத்தைத கொடுக்கும். பந்து எந்த திசையில் செல்கிறது என்று கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும். … Read more

இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் திடீர் ஒய்வு

இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் திடீர் ஒய்வு

இயன் பெல் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர். இவர் அந்த அணிக்காக 118 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 7,725 ரன்களும், ஒருநாள் போட்டியில் 5,416 ரன்களும் அடித்தார். டெஸ்ட் போட்டியில் 22 சதங்களும் 46 அரைசதங்களும், ஒருநாள் போட்டியில் நான்கு சதங்களும், 35 அரைசதங்களும் அடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு கடந்த ஐந்து வருடமாக இங்கிலாந்து அணியில்  இடம் கிடைக்காததால் கவுன்ட்டி போட்டியிலும் மட்டும் விளையாடி … Read more

அமிரகத்தில் மைதானம் இப்படித்தான் இருக்கும் – புவனேஷ்வர் குமார்

அமிரகத்தில் மைதானம் இப்படித்தான் இருக்கும் - புவனேஷ்வர் குமார்

இந்தியாவை போன்ற சீதோஷ்ண நிலைதான் ஐக்கிய அரபு அமீரகத்திலும் என புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புவனேஷ்வர் குமார் பேசும்போது ‘‘டெக்னிக்கலாக அதிக அளவில் மாற்றம் செய்து கொள்ள வேண்டியதில்லை. இங்குள் சீதோஷ்ண நிலை இந்தியாவை போன்றுதான் உள்ளது. ஒரே விசயம் நாம் இந்தியாவில் 8 மைதாங்களில் விளையாடினோம். இங்கு மூன்று மைதானம். சீதோஷ்ண நிலை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். தொடரின் 2-வது பாதி நேரத்தில் ஆடுகளம் சற்று ஸ்லோவர் ஆகும். நாங்கள் நீண்ட வருடங்களாக குறைந்த … Read more

இவருதான் எனக்கு தலைமை ஆசிரியர் – கிறிஸ் கெய்ல்

இவருதான் எனக்கு தலைமை ஆசிரியர் - கிறிஸ் கெய்ல்

வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக உள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘திரும்பவும் வகுப்பறைக்கு வந்துள்ளோம். சில புதிய வீரர்கள் வந்துள்ளனர். அவர்களுடன் இருப்பது சிறப்பான விசயம். அதுபோல் சில புதிய ஆசிரியர்கள் வந்துள்ளனர். நாங்கள் புதிய தலைமை ஆசிரியரை (அனில் கும்ப்ளே) பெற்றுள்ளோம். புதிய கேப்டனாக கேஎல் ராகுல் இருக்கிறார். இருவருடன் … Read more

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரர் அணிக்கு திரும்புவாரா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரர் அணிக்கு திரும்புவாரா

பென் ஸ்டோக்ஸ் 14 நாட்கள் காத்திருந்து குடும்பத்துடன் இணைந்துள்ளார். வருகிற 19-ந்தேதி ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் விளையாட வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்கு முன்னதாக வந்து ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கனவே அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தியதால் குடும்பத்துடன் அவர் தங்கியிருக்கும் காலம் மிகக் குறைவாக இருக்கும். இதனால் கூடுதல் நாட்கள் நியூசிலாந்தில் தங்கிருப்பார் என்று கூறப்படுகிறது. ஆகவே, ஐபிஎல் தொடக்கத்தில் அவர் கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது. தற்போதைய நிலையில் பென் … Read more

கெவின் பீட்டர்சனின் சிறந்த வெர்சனா இந்த வீரர்?

கெவின் பீட்டர்சனின் சிறந்த வெர்சனா இந்த வீரர்?

இங்கிலாந்து அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் டாம் பாண்டன் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை ஆலோசகர் டேவிட் ஹசி கூறுகையில் ‘‘டாம் பாண்டனை ஒப்பந்தம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை வெளிநாட்டு வீரர்கள் அணியில் வந்து இணையவில்லை. டாம் பாண்டன் நேரடி ஆட்டத்தை காண உற்சாகமாக இருக்கிறோம். பிக் பாஷில் அவரது ஆட்டம் தனித்துவமானதாக இருந்தது. அனுபவ வீரர்களான தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல் ஆட்டங்களும் சிறப்பாக இருக்கும். அவர்கள் இளைஞர்களுக்கு … Read more

நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்

நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்

 டெஸ்ட் போட்டியில் தற்போது ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். இளம் வீரர்கள் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, ஷுப்மான கில் போன்றோர் உள்ளனர். முரளி விஜயும் உள்ளார். இதனால் ஷிகர் தவானின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் அணிக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கையை விடவில்லை என்று ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷிகர் தவான் பேசும்போது நான் இந்திய டெஸ்ட் அணியில் இல்லை. அதற்காக நான் மீண்டும் அணிக்கு திரும்புவேன் … Read more

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடுவதில் சிக்கல்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடுவதில் சிக்கல்

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணை பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடு துணை பிசியோதெரபிஸ்ட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முதல் இரண்டு சோதனையின்போது நெட்டிவ் முடிவு வந்தது. 3-வது சோதனையில் பாசிட்டிவ் வந்துள்ளது என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தெரிவித்துள்ளது.