அமெரிக்காவில் பரபரப்பு : அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் பரபரப்பு : அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் வாஷிங்டன்  தலைநகரில் அமைந்துள்ள வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதனால் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த அதிபர் டோனல்ட் டிரம்ப்பை ரகசியச் சேவைப் பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். முதல் கட்ட விசாரணையில் வெள்ளை மாளிகைக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றியுள்ளார். இதனை பார்த்த ரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மீண்டும் சில நிமிடங்களில் செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசினார். அதில் சட்ட அமலாக்க … Read more

மக்கள் வெளியேற்றபட்டதால் இழப்புகள் தவிர்க்கப்பட்டது

மக்கள் வெளியேற்றபட்டதால் இழப்புகள் தவிர்க்கப்பட்டது

இந்தோனேசியாவில் உள்ள 120 எரிமலைகள் எந்த நேரத்திலும் வெடிக்க கூடிய நிலையில் உள்ளன. அதில் சினாபங் என்ற எரிமலையானது சில நேரங்களில் வெடித்து அவ்வபோது சிலபேர் இறந்துள்ளனர். அந்த வகையில் தற்போதும் அந்த எரிமலை வெடித்துள்ளது ஆனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றபட்டனர் அதன் காரணமாக இழப்புகள் எதும் ஏற்படவில்லை. இந்த எரிமலை வெடித்ததில் அதனுடைய சாம்பல் 20 கிலோமீட்டர் வரை பரவியுள்ளது.

பிரேசில் அதிபர் அலட்சியமே காரணம்

பிரேசில் அதிபர் அலட்சியமே காரணம்

கொரோனாவின் கோரதண்டவத்தால் உலகம் முழுவதும் பெரிய சிக்கல்களை சந்தித்துள்ளது. அதுவும் கொரோனவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் பிரேசிலும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை கடந்துள்ளது அதேபோல் பிரேசிலில் ஒரு லட்சத்தை தாண்டியது. பிரேசிலில் ரியோ டி பாஸ் என்ற தன்னார்வ நிறுவன தொண்டு ஒன்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆயிரம் பலூன்களை பறக்க விட்டது.  பிரேசில் அதிபர் ஆரம்பத்தில் இருந்து கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் … Read more

சுற்றசுழல் ஆய்வாளர்கள் கவலை

சுற்றசுழல் ஆய்வாளர்கள் கவலை

ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள மொரிசியஸ் தீவுக்கு பயணம் சென்ற போது சர்வதேச அளவில் பாதுகாப்பு தளமாக விளங்கும் பாயிண்ட் டி எஸ்னி என்ற பகுதியில் பாறையின் மீது அந்த சரக்கு கப்பல் மோதியதால் அந்த கப்பலில் இருந்த பெட்ரோல் கசிய தொடங்கியது இருப்பினும் அந்த கப்பலில் இருந்த குழுவை பத்திரமாக மீட்டனர். ஆனால் பெட்ரோல் கசிவதை நிறுத்த முடியவில்லை அதனால் அவசர சுற்றுசுழல் நிலையை பிரகனப்படுதியது. மேலும்  … Read more

கொரோனா குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கொரோனா குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க போராடி வருகின்றனர் மேலும் உலகம் முழுவதும் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி வருகிறது. இந்த வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர் முன்பெல்லாம் இந்த வைரஸ் 3 முதல் 5 நாள்களுக்கு உயிர்வாழும் என கூறி வந்தனர் ஆனால் தற்போது 8 நாள்கள் வரை உயிர்வாழும் என விஞ்ஞானிகள் … Read more

தென்கொரியாவில் சோகம்

தென்கொரியாவில் சோகம்

தென்கொரியாவில் கடந்த ஒரு வாரமாக  கனமழை பெய்து வருகிறது இதனால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் பல பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கின்றன. கனமழை பெய்து வரும் காரணத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பள்ளிகளுக்கு முககவசம் அணிந்து வர வேண்டும்

பள்ளிகளுக்கு முககவசம் அணிந்து வர வேண்டும்

உலகம் முழுவதும் கொரோனா 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் எல்லா தொழில்நுட்ப நிறுவங்களும் முடக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகலும் மூன்று மாதங்களாக செயல்படவில்லை இந்த நிலையில் இங்கிலாந்தில் பள்ளிகள் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ்  ஜான்சன் அறிவித்தார். இதுபற்றி அவர் கூறும்போது இந்த வைரஸ் மிகவும் கொடுமையானது இனிமேலும்  பள்ளிகள் திறக்காமல்  விட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் இதனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படுகின்றன … Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவது பரவி வருகிறது. பல நாடுகளில் கொரோனா வைரசை கட்டுபடுத்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் கொரோனா வைரசை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவந்தது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நியூஸிலந்தில் கடந்த 100 நாட்களாக யாருக்கும் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்படவில்லை. இதற்க்கு முக்கிய காரணம் அந்த நாட்டில் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கமே காரணம். இருப்பினும் பொது முடக்கம் நாட்களில் … Read more

இந்த வெடிவிபத்து மிகவும் மோசமானது

இந்த வெடிவிபத்து மிகவும் மோசமானது

லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து மிகவும் மோசமானது. இந்த வெடிவிபத்தானது துறைமுகத்தில் உள்ள கப்பலில் தீப்பற்றியதன் மூலம் அங்கு இருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து ஏற்ப்பட்டது. இந்த ரசாயணம் விவசாய உரம் தயாரிக்கவும் வெடிமருந்து தயாரிக்கவும்  பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த வெடி விபத்தினால் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர் 5000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்த விபத்தானது 43 மீட்டர் பள்ளத்தை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவிகின்றனர்.

பிரிட்டனில் வினோத சம்பவம்

பிரிட்டனில் வினோத சம்பவம்

பிரிட்டனில் வாடிக்கையாளர் ஒருவர்  ஹாம்ப்ஷியர்  பகுதியில் உள்ள McDonalds நிறுவனத்தில் இருந்து ஆர்டர் செய்த கோழித்துண்டில் முககவசம் இருந்ததால் அதிர்ச்சியானார். அவருடைய 6 வயது மகன் ஆர்டர் செய்த  கோழித்துண்டை சாப்பிடும் போது தொண்டையில் அடைப்பு ஏற்பட்டதால் அதனை வெளியே துப்பும் போது அதில் நீலநிறத்தில்  ஏதோ ஒன்றை பார்த்தார். மீதமிருந்த கோழித்துண்டிலும் நீலநிறத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அந்த நிறுவனத்திடம் விசாரித்த போது இது எங்கள் உணவகங்களில் சமைக்கப்படவில்லை ஏதோ தவறுதலாக ஏற்பட்டிருக்கலாம் இனிமேல் … Read more