தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த நான்கு மாவட்டங்களுக்கு  மட்டும் இது பொருந்தும்!

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த நான்கு மாவட்டங்களுக்கு  மட்டும் இது பொருந்தும்!

கடந்த மாதம் 28 ஆம் தேதி 44வது சர்வதேச  செஸ் ஒலிம்பியாட் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சர்வதேச  செஸ் ஒலிம்பியாட் போட்டியின்  தொடக்கவிழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது அந்த விழாவை பிரதமர் மோடி தொடங்கி  வைத்தார்.

மேலும் 28 ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச  செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னை ,திருவள்ளூர் ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உள்ளூர்  விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக விடுமுறை அளிக்கப்பட நான்கு மாவட்டங்களுக்கும் வரும் சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment