அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை?

Photo of author

By Parthipan K

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை?

Parthipan K

The government bus overturned and the accident happened!..the condition of the passengers traveling in the bus?

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை?

கோயம்புத்தூரிலிருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை திண்டுக்கலை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் ஓட்டி வந்தார்.மற்றொருவர் பழனி ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர்  முருகன்.இவருடைய வயது40.

இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.இந்த அரசு பேருந்தில் தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயணம் சேர்த்து வருகின்றார்கள்.இந்நிலையில் இன்று அரசு பேருந்தில் 56 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

நேற்று இரவு 11:30 மணி அளவில் அந்த பேருந்து பரவை கொண்ட மாரி பாலம் அருகே வந்திருந்த போது திடீரென்று எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே கவிழ்ந்தது.இந்த விபத்தை கண்ட சக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் இந்த விபத்தில் சிக்கியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின் மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.