தொடர்ந்து பேசியதால் செல்போனை பறித்த கணவன்! ஆத்திரத்தில் அங்கே கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி ! 

0
205
The husband snatched the cell phone because he kept talking! In anger, the wife poured boiling oil there!
The husband snatched the cell phone because he kept talking! In anger, the wife poured boiling oil there!

தொடர்ந்து பேசியதால் செல்போனை பறித்த கணவன்! ஆத்திரத்தில் அங்கே கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி ! 

மனைவி போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததால் கணவன் போனை வாங்கி வைத்ததற்கு மனைவி கொதிக்கிற எண்ணையை கணவர் மீது ஊற்றி உள்ளார். அதிர்ச்சியான இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் கம்பம் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட மாதவி நகரைச் சேர்ந்தவர் சுனில் குமார். இவர் வங்காளதேசத்தில்  டாக்கா நகரில்  உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பாவனா.

இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு விடுமுறையில் வீட்டுக்கு வந்த சுனிலிடம் பக்கத்துக்கு வீட்டு பெண் உங்கள் மனைவி நீங்கள் வேலைக்கு சென்ற பின்னர் எனது கணவரிடம் நீண்ட நேரம் பேசுகிறார் என புகார் கூறி இருக்கிறார்.  இதுகுறித்து சுனில் பாவனாவிடம் விசாரித்த போது பேசுவது இல்லை என கூறியுள்ளார்.

இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு வந்திருந்த போது பக்கத்து வீட்டு பெண்ணின் கணவருடன் நீண்ட நேரம் மொபைல் போனில் பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த சுனில் இனிமேல் பேசக்கூடாது என எச்சரிக்கை செய்தும் பாவனா கேட்கவில்லை. மீண்டும் தொடர்ந்து பேசியதால் வெறுப்பான சுனில் செல்போனை வாங்கி வைத்துள்ளார்.

இரவு சுனில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அவர் தூங்குவதற்காக காத்திருந்த பாவனா இரவு 2 மணி அளவில் எழுந்து சென்று அடுப்பில் எண்ணெய்யை வைத்து நன்றாக கொதிக்க வைத்துள்ளார். பின்னர் அதனை தூக்கி வந்து கணவரின் அந்தரங்க பகுதியில் ஊற்றியுள்ளார்.

நடுஇரவில் கொதிக்கிற எண்ணெய்யை ஊற்றியதும் சுனில் அலறித் துடித்துள்ளார். சூட்டினால் அவரின் அந்தரங்க பகுதி 70% எரிந்துள்ளது. பாவனா வீட்டை விட்டு ஓடிவிடவே வலியால் துடித்த சுனிலின் அலறல் கேட்டு அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரின் மனைவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் தப்பியோடிய பாவனாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

போன் பேசக்கூடாது என சொன்னதற்கு கணவர் மீது மனைவி எண்ணெய் ஊற்றிய செயலை கேள்விப்பட்ட அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.