சேலத்தில் அரங்கேறிய சம்பவம்! மாமனார்,மாமியாரே மருமகளை கொலை செய்த காரியம்?

0
144

சேலத்தில் அரங்கேறிய சம்பவம்! மாமனார்,மாமியாரே மருமகளை கொலை செய்த காரியம்?

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அருகே முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகலிங்கம். இவருடைய மனைவியின் பெயர் ராஜலட்சுமி. இவர்களது ஒரே பிள்ளை தனுஸ்ரீ வயது 26. அனுஸ்ரீவிற்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்திராஜ் இவருடைய வயது 31. இவர் இருவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் நடைபெற்றது. ரெட்டிபட்டியில் தனியாக இருவரும் வசித்து வந்தனர்.

இதற்கிடையில் சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே சில தகராறு ஏற்பட்டது.இதில் கோவத்தில் அருகில் இருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து தனுஸ்ரீயை கொடுமையாக தாக்கியுள்ளார். இதில் தனுஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். குறித்து சூரமங்கலம் போலீசார் கீர்த்திராஜை கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி இக்கொலை சம்பவத்தை குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கீர்த்திராஜின் தந்தை பெரியசாமி இவருடைய வயது 60. தாய் ரஞ்சனி வயது 57 ஆகும். கீர்த்திராஜின் பெற்றோர்கள் தனுஸ்ரீயிடம் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெரியசாமி மற்றும் ரஞ்சனியை போலீசார் கைது செய்தனர். மேலும் விபசாரணை மூலம் பெரியசாமி என்பவர் ஊர்க்காவல்படை வீரர் என்பது தெரியவந்தது.

author avatar
Parthipan K