பிரதமர் இல்ல முற்றுகைக்கு அனுமதி மறுத்த காவல்துறை – டெல்லியில் தொடரும் பரபரப்பு!

0
106
#image_title

பிரதமர் இல்ல முற்றுகைக்கு அனுமதி மறுத்த காவல்துறை – டெல்லியில் தொடரும் பரபரப்பு!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக பிரதமர் இல்ல முற்றுகை மற்றும்ஸபோராட்டத்திற்க்கு அனுமதி இல்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2021, 2022ஆம் ஆண்டு கண்டு வரப்பட்ட மதுபான கொள்கை வழக்கில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், பல கோடி லஞ்சம் பெற்றிருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அதனை அமலாக்கதுறை எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக ஏழு முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையிலும் அவர் ஆஜர் ஆகாததால் அவரை மார்ச் 21ஆம் தேதி இரவு கைது செய்தது அமலாக்கதுறை.

தற்போது வருகின்றன மார்ச் 28ஆம் தேதி வரை அமலாக்கதுறை கட்டுப்பாட்டில் உள்ளார் ஆம்ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதலமைச்சருமா அரவிந்த் கெஜ்ரிவால்.

சிறையில் இருந்து கொண்ட தனது முதல்வர் பதவியை வகித்து பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்து வருவது குறிப்பிடதக்கது.

கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக இன்று பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை ஆம்ஆத்மி கட்சி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடவோ போராட்டம் நடத்தவே அனுமதி மறுத்துள்ளது டெல்லி காவல்துறை.

மேலும், ஆம்ஆத்மி கட்சி தொண்டர்கள் பிரதமர் இல்லத்தை நெருங்காதவாரு பிரதமர் இல்லத்திற்க்கு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

author avatar
Savitha