குடிபோதையில் மாடியில் இருந்து குதித்த வாலிபர்!! மின்கம்பியில் தொங்கிய பரிதாபம்!!

0
33
The teenager who jumped from the floor while drunk!! Pity hanging on the wire!!
The teenager who jumped from the floor while drunk!! Pity hanging on the wire!!

குடிபோதையில் மாடியில் இருந்து குதித்த வாலிபர்!! மின்கம்பியில் தொங்கிய பரிதாபம்!! 

குடிபோதையில் இருந்த வாலிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை அடுத்துள்ள  மேற்கு தாம்பரம் காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் டேனியல் (வயது 23).  கூலிவேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக  கோபித்து கொண்டு பழைய பெருங்களத்தூரில் வசித்து வரும் அவரது  நண்பர் மணிகண்டன் வீட்டுக்கு சென்றார்.

அன்று இரவு சுமார் 11 மணி அளவில் டேனியலும்,மணிகண்டனும் வீட்டின் மாடியில் மது அருந்தி உள்ளனர். அப்போது மணிகண்டன் டேனியலிடம் வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.ஆனால் செல்ல மறுத்த டேனியல் தான் சாக போவதாக மணிகண்டனிடம் கூறினார். அவருக்கு போதை மிகவும் அதிகமானதை அடுத்து, மாடியில் படுக்க வைக்கலாம் என கருதி,மணிகண்டன் வீட்டுக்குள் சென்று பாய்,தலையணை எடுக்க சென்று உள்ளார்.

அப்போது போதையில் எழுந்த டேனியல் மாடியில் இருந்து திடீரென தெருவில் உள்ள மின்கம்பிகள் மீது குதித்து உள்ளார். அதில் மின்கம்பியில் அவர் சிக்கி மின்சாரம் தாக்கி அவர் துடிதுடித்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற மக்கள் இதைக் கண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த நிகழ்வு குறித்து அருகில் உள்ளவர்கள், பீர்க்கன்காரணை போலீசார், தாம்பரம் தீயணைப்பு வீரர்கள், முடிச்சூர் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்காரணமாக  உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மின்கம்பியில் துடிதுடித்து கொண்டு இருந்த டேனியலை மீட்டனர்.

பிறகு மருத்தவ குழுவினர் பரிசோதனை செய்ததில் டேனியல் இறந்தது தெரிய வந்தது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குடும்ப பிரச்சனையா?? அல்லது வேறு ஏதாவது காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டாரா?? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

டேனியல் குதித்ததால் பழுதான மின்கம்பிகளை மின்வாரிய ஊழியர்கள் சுமார் 1 மணிநேரம் சீரமைத்து பின்னர் அந்த பகுதியில் மின் இணைப்பு கொடுத்தனர். மாடியில் இருந்து வாலிபர் குதித்து வாலிபர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.