துரோக அ.தி.மு.கவை வீழ்த்த திமுகவிற்கு முழு ஆதரவளிக்கும் முக்குலத்தோர் புலிகள் படை!

0
183
#image_title

துரோக அ.தி.மு.கவை வீழ்த்த திமுகவிற்கு முழு ஆதரவளிக்கும் முக்குலத்தோர் புலிகள் படை!

2024ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடக்க விருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு முழு ஆதரவையும் தருவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்க்கும் திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் ஆதரவாக தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிகள் படை பிரச்சாரம் மேற்க்கொள்ளும் எனவும் அக்கட்சியின் தலைவர் கருணாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக கட்சி தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் இன்னும் சற்று நேரத்தில் சந்தித்து தனது ஆதரவை உறுதிப் படுத்தவுள்ளதாகவும் முதல்வரை சந்திக்கும் பொழுது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும், மதுரை விமான நிலையத்திற்க்கு முத்துராமலிங்கரின் பெயரை வைக்க வேண்டும், பாராளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களின் சிலைகளை வைக்க வேண்டும் உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளுடன் திமுக தலைவரை சந்திக்கவுள்ளார்.

மேலும், மத்தியில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக நிகழ வேண்டும் அதற்காக திமுகவை ஆதரிக்கிறோம், துரோக அதிமுகவை வீழ்த்த திமுகவிற்க்கு ஆதரவாக 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

author avatar
Savitha