எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சி நடந்தது… – டிரைவர் பவானி கிருஷ்ணன் பகீர் தகவல்!

0
37
#image_title

எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சி நடந்தது… – டிரைவர் பவானி கிருஷ்ணன் பகீர் தகவல்!

எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சி நடந்ததாக டிரைவர் பவானி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். இவர் சிறு வயதிலிருந்தே பல துன்பங்களை அனுபவித்துள்ளார். வறுமையில் பசியால் வாடியுள்ளார். 7 வயது முதல் நடிக்கத் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே நடித்து புகழ் பெற்றார். தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை  வேலை இல்லாமல் இருக்கும் தன்னுடைய நண்பர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் உதவி செய்து வந்தார். இதன் பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றார். தமிழக அரசியலில் ஈடுபட்டு தமிழக முதலமைச்சராகவும் வலம் வந்தார்.

இப்படிப்பட்ட நல்ல குணம் கொண்ட எம்ஜிஆருடன் கார் டிரைவராக இருந்தவர் பவானி கிருஷ்ணர். இவர் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, அவர் எம்ஜிஆர் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில்,

முதலில் அறிஞர் அண்ணாவிற்குதான் நான் கார் ஓட்டினேன். அதன் பிறகு கலைஞர் ஐயா, எம்.ஜிஆர் ஐயா, ஜானகி அம்மா, ஜெயலலிதா அம்மா அவர்களுக்கு நான் கார் ஓட்டினேன்.

நான் எம்.ஜி.ஆர் ஐயாவுக்கு நான் கார் ஓட்டினேன். அப்போது, நான் கார் ஓட்டிக்கொண்டு போய்ட்டு இருப்பேன். அப்போது எம்ஜிஆர் சொல்வாரு… யாராவது பாசமா நிறுத்தினார்கள் என்றால், உடனே வண்டியை நிறுத்திவிடாதே.. ஏனென்றால், என் உயிருக்கு எப்போதும் உத்தரவாதம் கிடையாது. என்னை கொலை செய்துவிடுவார்கள்.

ஆதலால் கார் ஓட்டும்போது யார் நிறுத்தினாலும் காரை நிறுத்தக்கூடாது. காருக்கு சேதம் ஆகிவிடும், நான் உன்னை திட்டிவிடுவேன் என்றெல்லாம் நினைக்ககூடாது.. காரை நிறுத்தாமல் ஓட்டு என்று என்னிடம் சொல்லிவிடுவார்.

அவர் சொன்னமாதிரி நான் காரை ஓட்டிக்கொண்டு போகும்போது, மாட்டு வண்டி, சைக்கிள் எல்லாம் நடுவில் வைத்துவிடுவார்கள். நான் அதையெல்லாம் பார்க்காமல் அப்படியே அடித்துக் கொண்டு கார் ஓட்டுவேன். ஒருமுறை சோடா பாட்டிலால் காரை தாக்கி எம்.ஜி.ஆர். ஐயாவை கொலை செய்ய பார்த்தார்கள்.
அதேபோல் நான் யாராவது எந்த பொருளை கொடுத்தாலும் காரில் வாங்கி வைக்கக்கூடாது என்று சொல்லிவிடுவார். நான் காரிலிருந்து ஏதாவது கேட்டு அனுப்பினால் உடனே கொடுத்து அனுப்பிவிடுவார்.

எம்ஜிஆர் ஐயா நான் வேலைக்கு சேர்ந்து முதல் 6 மாதம் வாங்க, போங்க என்று பேசினார். அதன் பிறகு வா, போ என்று உரிமையோடு கூப்பிட ஆரம்பித்துவிட்டார். கார் பின்னாடி எப்போதும் ஒரு துப்பாக்கி இருக்கும். ஒருமுறை காரை சோதனை செய்யும்போது நான் பார்த்துவிட்டு அவரிடம் கேட்டேன். என்னது துப்பாக்கியெல்லாம் காரில் இருக்கிறது என்று. அதற்கு எம்ஜிஆர் சொன்னார், என்னை யாராவது கொலை செய்ய வந்துவிட்டால்.. என் தற்காப்புக்காத்தான் அதை வைத்துள்ளேன் என்று கூறினார்.

ஒருமுறை காரிலேயே மறந்து துப்பாக்கியை வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார். எப்போதுமே நான் காரை சோதனை செய்வேன். ஒருமுறை அப்படி சோதனை செய்யும்போது துப்பாக்கி இருந்தது. அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று அவரிடம் கொடுத்தேன். அவர் சிரித்துக்கொண்டே என்னிடம் வாங்கி அவர் படுக்கை அறையில் உள்ள தலையணையில் வைத்துக் கொண்டார் என்று சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.
author avatar
Gayathri