ஈறு, பேன் தொல்லைக்கு இந்த பாட்டி வைத்தியம் போதும்..!!

0
281
#image_title

ஈறு, பேன் தொல்லைக்கு இந்த பாட்டி வைத்தியம் போதும்..!!

தலையில் பேன், ஈறு இருந்தால் அவை அரிப்பை உண்டு செய்யும். குடும்பத்தில் ஒருவருக்கு தொற்றிவிட்டாலே மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடும். இந்த பேன், ஈறுகளை ஒழிக்க கெமிக்கல் நிறைந்த ஷாம்பு பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் தான் ஏற்படுமே தவிர இதனால் எந்த ஒரு பயனும் நமக்கு கிடைக்காது. எனவே செலவின்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பேன், ஈறு தொல்லைக்கு முடிவு கட்டுங்கள்.

தேவையான பொருட்கள்:-

*வேப்பிலை – 1 கைப்பிடி அளவு

*வெற்றிலை – 3

*மிளகு – 1/2 தேக்கரண்டி

*இஞ்சி சாறு – 1/2 தேக்கரண்டி

*தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை…

முதலில் 1 கைப்பிடி அளவு வேப்பிலையை காம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வேப்பிலை மற்றும் வெற்றிலை, மிளகு, இஞ்சி சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி தலை முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரத்திற்கு ஊறவிட்டு பின்னர் தலைக்கு குளிக்கவும்.

இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வருவதன் மூலம் பொடுகு, பேன், ஈறு தொல்லை நீங்கி முடி ஆரோக்கியமாக இருக்கும்.