மசாலா உதிராமல் மீன் ப்ரை செய்யும் முறை இது தான்!! இன்னைக்கு ட்ரை பண்ணி பாருங்க!!

0
71
#image_title

மசாலா உதிராமல் மீன் ப்ரை செய்யும் முறை இது தான்!! இன்னைக்கு ட்ரை பண்ணி பாருங்க!!

மீனில் தயாரிக்கப்படும் அனைத்து உணவுகளும் செம்ம ருசியாக இருக்கும்.அதேபோல் மீன் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதும் கூட.இந்த மீனை ப்ரை செய்து சாப்பிடுவது என்றால் அலாதி பிரியமா? அப்போ இப்படி ஒரு முறை மீன் மசால் செய்து ப்ரை பண்ணி பாருங்கள்.மிகவும் சுவையாகவும்,அதேபோல் மசாலாக்கள் பிரியாமல் மீனுடன் ஒட்டி கொள்ளும்.இதற்காக கடையில் ப்ரை மசால் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*குழம்பு மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி

*கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி

*இஞ்சி பூண்டு விழுது – 1/4 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*கான் பிளார் பவுடர் – 1 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – தேவையான அளவு

*எண்ணெய் – தேவையான அளவு

*அரிசி மாவு – 2 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பெரிய அகலமான பாத்திரம் எடுத்து அதில் மீன் போட்டு கொள்ளவும்.அதில் குழம்பு மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி,கொத்தமல்லி தூள் 1 தேக்கரண்டி சேர்க்கவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும்.
அதோடு கான் பிளார் பவுடர்,அரிசி மாவு 2 தேக்கரண்டி சேர்க்கவும்.கலருக்காக காஸ்மீரி சில்லி பவுடர் சேர்த்து கொள்ளலாம்.தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு ஊற்றி நன்கு பிரட்டி கொள்ளவும்.இறுதியாக 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

குறிப்பு:- மசாலா பொருட்கள் சேர்க்கும் பொழுது தண்ணீர் ஊற்ற கூடாது.மீனில் இருந்து ஊறி வரும் தண்ணீர் போதுமானதாக இருக்கும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் மீன் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும்,மசாலா கலந்து வைத்துள்ள மீனை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.

பிறகு மிதமான தீயில் 3 நிமிடங்கள் வேக விடவும்.மீனை இருபுறமும் திருப்பி போட்டு வேக விடவும்.வெந்து வந்ததும் எண்ணையை ஈர்த்து விட்டு மீனை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.இப்படி மீன் மசாலா தயார் செய்து பொரித்தால் மசால் உதிராமல் மீனுடன் ஒட்டி இருக்கும்.

பொரித்து வைத்துள்ள மீன் மீது சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை வைத்து சாப்பிடும் பொழுது டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்.