கரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து… இந்த மூன்று பொருள்கள் போதும்…

0
33

 

கரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து… இந்த மூன்று பொருள்கள் போதும்…

 

நமக்கு இருக்கும் கரையாத சளியையும் கரைத்து வெளியேற்றக் கூடிய நாட்டு மருந்தை வெறும் மூன்று பொருள்களை வைத்து எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

மழை காலமாக இருந்தாலும் சரி வெயில் காலமாக இருந்தாலும் சரி நம்மில் பலருக்கு சளி என்பது பிடிக்கும். சளி என்பதுதொற்று நோய் ஆகும். இதை உடனடியாக விரட்ட வெறும் மூன்று பொருட்களை வைத்து மருந்து தயாரித்து பயன்படுத்தலாம்.

 

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* வெற்றிலை

* தேன்

* இஞ்சி

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

 

முதலில் வெற்றிலையை காம்பு நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு ஒரு மிக்சி ஜாரில் வெற்றிலையும் இஞ்சியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

இறுதியாக இதில் சிறிதளவு சூடான தண்ணீரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பின்னர் கிடைத்துள்ள இந்த சாற்றை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். சுவைக்காக இதில் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

 

நெஞ்சு சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படும் நபர்கள் தொடர்ந்தா இந்த மருந்தை காலை, மலை என்று 10 மில்லி லிட்டர் அளவில் குடித்து வர வேண்டும். இதனால் கரையாத சளியும் கூட கரைந்து வெளியேறும். மேலும் செரிமான பிரச்சனை குணமாகும்.

 

நுரையீரல் சம்பந்தமான நோய்கள், ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த மருந்தை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.