வாயு பிரச்சனையால் தொல்லையா!! 2 நிமிடத்தில் சரிசெய்ய எளிமையான வீட்டு வைத்தியம்!!

0
144
#image_title

வாயு பிரச்சனையால் தொல்லையா!! 2 நிமிடத்தில் சரிசெய்ய எளிமையான வீட்டு வைத்தியம்!!

வாயுப் பிரச்சனை காரணமாக உங்களுக்கு தினமும் தொல்லை ஏற்படுகிறது. அவ்வாறு தினமும் தொல்லை தரும் இந்த வாயுப் பிரச்சனையை இரண்டே நிமிடத்தில் எளிமையான முறையில் நீக்குவதற்கு எளிமையான வீட்டு வைத்தியத்தை இந்த பதவில் தெரிந்து கொள்வோம்.

மாறி வரும் இந்த காலகட்டத்தில் நாம் எந்த ஒரு விஷயத்தையும் அவசர அவசரமாக செய்து முடிக்கிறோம். சாப்பிடுவது, தூங்குவது, இதர செயல்கள் அனைத்தையும் சரியான முறையில் செய்வதில்லை. அவ்வாறு அவசர அவசரமாக சாப்பிடும் போது நாம் உணவை மட்டுமல்ல. காற்றையும் சேர்த்துதான் சாப்பிடுகிறோம். காற்றை எவ்வாறு சாப்பிட முடியும் என்று இந்த இடத்தில் கேள்வி வரும்.

நாம் வேக வேகமாக சாப்பிடும் பொழுது காற்றானது நாம் சாப்பிடும் உணவுடன் சேர்ந்து நம் உடலுக்குள் செல்கிறது. இந்த காற்றில் 80 சதவீதம் இரைப்பைக்கு சென்று ஏப்பமாகவும் மீதியுள்ள காற்று குடலுக்கு சென்று ஆசன வாய் வழியாக வெளியேறுகின்றது. இந்த பிரச்சனையை எளிமையான முறையில் நீக்க வீட்டு வைத்தியத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இதை செய்ய தேவையான பொருட்கள்

* சுடு தண்ணீர் – முக்கால் டம்ளர் அளவு

* கிராம்பு – 2 லிருந்து 3

* பெருங்காயப் பொடி – ஒரு சிட்டிகை

* எலுமிச்சம்பழம் – அரை பழம்

* உப்பு – தேவையான அளவு

முதலில் முக்கால் டம்ளர் அளவு இதமான சுடு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு சிட்டிகை பெருங்காயப் பொடியை எடுத்து இதில் கலந்து கொள்ளவும். பிறகு இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி குடிக்கலாம். வாயுப் பிரச்சனை இருக்கும் பொழுது இது மாதிரி தயார் செய்து குடிப்பதால் வாயுப் பிரச்சனை சரியாகிறது.

மேலும் அதிக வாயுப் பிரச்சனை இருந்தால் இதனுடன்.அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொள்ள வேண்டும். பிறகு கிராம்பு 2லிருந்து 3 எடுத்து தட்டி அதில் போட்டு நன்கு கலக்கி கொள்ள வேண்டும். பிறகு இதை குடித்தால் வாயுத் தொல்லை, அஜீரணம், செரிமான பிரச்சனை போன்ற வயிறு சம்பந்த மான எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.

பெருங்காயப் பொடியை ஏன் இதில் சேர்க்க வேண்டும் என்றால் பெருங்காயம் வாயுப் பிரச்சனையை சரி செய்யக் கூடிய அற்புதமான மருந்து. பெருங்காயம் வாதத்தை சரி செய்கின்றது. பெருங்காயம் குடலில் உள்ள கிருமிகளை அழித்து வாயுத் தொல்லையை சரி செய்கிறது.

எலுமிச்சம் பழம் நெஞ்சு எரிச்சலை குணப்படுத்தும். செரிமான பிரச்சனையை சரி செய்யும். வயிற்று வலி, வாந்தி, தொண்டை வலி எல்லாவற்றையும் சரி செய்யக் கூடியது.

கிராம்பானது வாசனை பொருளாக மட்டும் பயன்படுவது இல்லை. கிராம்பில் பல வகையான சத்துக்கள் உள்ளது. விட்டமின் சி அதிக அளவில் உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்கு அதிக அளவில் கிராம்பு தருகின்றது. கிராம்பு நமக்கு ஏற்படும் அசிடிட்டியை தடுக்கும். வாயுவை வெளியேற்றவும் கிராம்பு பயன்படுகிறது.

இந்த பதிவில் சொல்லப் பட்ட இந்த மருந்தை தயார் செய்து குடித்தால் வாயுத் தொல்லை பிரச்சனை நீங்கும். அதிக வாயுத் தொல்லை, நெஞ்சு எரிச்சல் உள்ளவர்கள் இதை குடித்தால் சில நிமிடங்களில் சரியாகும். இதனை குடிப்பதால் வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேறி விடும். இதை குடித்தால் நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகும் பொழுது இயல்பாக ஏப்பம் வரும்.