கண் புருவம் அடர்த்தியாக வளர இந்த 7 வழிகளில் ஏதேனும் ஒன்றை ட்ரை பண்ணவும்!

0
138
#image_title

கண் புருவம் அடர்த்தியாக வளர இந்த 7 வழிகளில் ஏதேனும் ஒன்றை ட்ரை பண்ணவும்!

ஆண், பெண் அனைவருக்கும் முக அழகை கூட்டுவதில் புருவம் அதிக பங்கு வகிக்கிறது. புருவம் அடர்தியாகவும், கருமையாகவும் இருந்தால் தனி அழகு தான்.

ஆனால் பலருக்கு புருவங்களில் முடி வளர்ச்சி இருப்பதில்லை. அதுமட்டும் இன்றி புருவ முடியும் கருமையாக இருக்காது. இதனால் புருவம் பார்க்க அழகாக இருக்காது.

எனவே புருவத்தின் வளர்ச்சியை அதிகரிக்கவும், அடர் கருமை நிறத்திற்கு கொண்டு வரவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளில் ஏதேனும் ஒன்றை அவசியம் பின்பற்றவும்.

தேங்காய் எண்ணெய்

கண் புருவ முடியின் வளர்ச்சியை அதிகரிக்க தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும். தேவையான அளவு தேங்காய் எண்ணெயை புருவத்தில் தடவி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

கற்றாழை ஜெல்

ஒரு ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல் எடுத்து புருவத்தில் தடவி வந்தால் விரைவில் புருவத்தில் முடி வளரத் தொடங்கும்.

ஆமணக்கு எண்ணெய்

கண் புருவ முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர ஆமணக்கு எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும். தேவையான அளவு ஆமணக்கு எண்ணெய் எடுத்து புருவத்தில் தடவி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

வெங்காயச் சாறு

பெரிய வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து புருவத்தில் தடவி மஜாஜ் செய்து வந்தால் புருவ வளர்ச்சி அதிகரிக்கும்.

வெந்தயம்

வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து புருவத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் புருவ வளர்ச்சி அதிகரிக்கும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலையை அரைத்து பேஸ்டாக்கி புருவத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் புருவ வளர்ச்சி அதிகரிக்கும்.

மூலிகை எண்ணெய்

செம்பருத்தி இலை, பூ, கறிவேப்பிலை, நெல்லிக்காய், வெந்தயம் உள்ளிட்ட பொருட்களை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து புருவத்தில் தடவி வந்தால் விரைவில் தீர்வு கிடைக்கும்.