முடி உதிர்வு நின்று அடர்த்தியாக வளர கேரளா பெண்கள் பயன்படுத்தும் எண்ணையை ட்ரை பண்ணுங்கள்..!!

0
94
#image_title

முடி உதிர்வு நின்று அடர்த்தியாக வளர கேரளா பெண்கள் பயன்படுத்தும் எண்ணையை ட்ரை பண்ணுங்கள்..!!

இன்றைய கால வாழ்க்கை முறையில் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் சந்தித்து வரும் பிரச்சனையாக இருப்பது தலை முடி உதிர்தல்.

தலை முடி உதிரக் காரணம்:-

*பொடுகு

*தலை அரிப்பு

*உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம்

*இரத்த சோகை

*ஜீன் குறைபாடு

*தலைமுடி வறட்சி

*மன அழுத்தம்

*முறையற்ற தூக்கம்

இந்த தலைமுடி உதிர்வு பாதிப்பு நின்று முடி அடர்த்தியாக வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை செய்து பார்க்கவும்.

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய்

*கற்றாழை

*கறிவேப்பிலை

*கருஞ்சீரகம்

செய்முறை…

ஒரு கற்றாழை மடலை எடுத்து தோல் நீக்கி அதன் ஜெல்லை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி கருஞ்சீரகப் பொடியை சேர்த்து கலந்து விடவும்.

அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் கலவையை ஊற்றிக் கொள்ளவும். அவை சூடானதும் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் 1/4 கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இந்த எண்ணையை தினமும் தலைக்கு உபயோகித்து வருவதன் மூலம் முடி உதிர்வு பாதிப்பு நின்று அடர்த்தியாக வளரும்.