உடலை இரும்பாக்கும் உளுந்து வடை!! இப்படி செய்தால் பஞ்சு போல் சுவையாக வரும்!!

0
25
#image_title

உடலை இரும்பாக்கும் உளுந்து வடை!! இப்படி செய்தால் பஞ்சு போல் சுவையாக வரும்!!

நவீன கால வாழ்க்கை முறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று.இன்றைய சூழலில் சத்தான உணவுகளை எடுத்து வந்தால் தான் உடலை ஓரளவு கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்ற சூழல் உருவாகி விட்டது.தானிய வகையைச் சேர்ந்த இந்த கருப்பு உளுந்து அதிகளவு ஊட்டச்சத்துக்களையும்,நார்சத்துக்களையும் கொண்டிருக்கிறது.

இவை செரிமான பாதிப்பு,நீரிழிவு நோய் பாதிப்பை குணமாக்கும் தன்மைகொண்டது.மலசிக்கல் பாதிப்பை நீக்குவதோடு குடலின் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

*உளுந்து பருப்பு – 1 கப்

*பச்சரிசி – 1/4 கப்

*கற்கண்டு – 1 கப்
அல்லது
வெல்லம்

*எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் உளுந்து பருப்பு 1 கப் மற்றும் பச்சரிசி 1/4 கப் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 அல்லது 3 முறை நன்கு அலசிக்கொள்ளவும்.பின்னர் 1 1/2 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை உளுந்து பருப்பு + பச்சரிசியை தண்ணீரில் ஊறப்போடவும்.

நன்கு ஊறி வந்த பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் உளுந்து + பச்சரிசியை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.பின்னர் எடுத்து வைத்துள்ள 1 கப் கற்கண்டு அல்லது வெல்லத்தை சேர்த்து மீண்டும் அரைக்கவும்.தேவைப்பட்டால் தண்ணீர் சிறிதளவு ஊற்றிக் கொள்ளவும்.உளுந்து பருப்பு நன்கு அரைபட்டு பஞ்சு போல் வந்ததும் அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் மெதுவடை செய்வது போல் தண்ணீரில் நினைத்து தயார் செய்து வைத்துள்ள உளுந்து மாவில் சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து கொள்ளவும்.பின்னர் நடுவில் ஓட்டை போட்டு சூடேறியுள்ள எண்ணெயில் ஒவ்வொன்றாக போட்டு நன்கு வேக விட்டு எடுக்கவும்.உளுந்து வடை வேகும் பொழுது அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.இவை நன்கு வெந்து வந்ததும் ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.