ஒரே நாளில் அனைத்து நரைமுடிகளும் கருமையாக மாற ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்காயத் தோலை இப்படி பயன்படுத்துங்கள்!!

0
84
#image_title

ஒரே நாளில் அனைத்து நரைமுடிகளும் கருமையாக மாற ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்காயத் தோலை இப்படி பயன்படுத்துங்கள்!!

இன்றைய காலத்தில் பெரியவர்கள், சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் தலை முடி நரை பாதிப்பு இருக்கிறது.

இதற்கு இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகிப்பது, தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது போன்றவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதற்கு இரசாயனம் கலந்த பொருட்களை தலைக்கு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தலை முடியை கருமையாக்க முயற்சிப்பது நல்ல பலனை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:-

*சின்ன வெங்காயத் தோல் – 1 கைப்பிடி அளவு

*நெல்லிக்காய் பவுடர் – 1 தேக்கரண்டி

*டீ பவுடர் – 1/2 தேக்கரண்டி

*தண்ணீர் – 1 1/2 டம்ளர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் 1 கைப்பிடி அளவு சின்ன வெங்காயத் தோல், 1 தேக்கரண்டி நெல்லிக்காய் பவுடர் மற்றும் 1/2 தேக்கரண்டி டீ பவுடர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 1 1/2 கிளாஸ் தண்ணீர் சுண்டி 3/4 டம்ளர் என்று வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு ஸ்ப்ரே பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும். நரை முடி இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்யவும். பின்னர் 1 மணி நேரம் வரை காத்திருந்து மைல்டு ஷாம்பு உபயோகித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தோம் என்றால் தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாறிவிடும்.