உங்கள் முகம் பால் போல் மென்மையாக பொலிவாக இருக்க முட்டையின் வெள்ளை கருவை இப்படி பயன்படுத்துங்கள்!!

0
80
#image_title

உங்கள் முகம் பால் போல் மென்மையாக பொலிவாக இருக்க முட்டையின் வெள்ளை கருவை இப்படி பயன்படுத்துங்கள்!!

முகம் பளபளப்பாக இருந்தால் தான் அழகு.முகத்தை பொலிவாக வைக்க இயற்கை முறையை தொடர்ந்து பின்பற்றி வருவது நல்லது.

தேவையான பொருட்கள்:

1)முட்டையின் வெள்ளை கரு
2)வைட்டமின் ஈ மாத்திரை
3)கற்றாழை ஜெல்

செய்முறை:

ஒரு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் பிரித்து சிறிய கிண்ணத்தில் ஊற்றவும்.

அதன் பின்னர் ஒரு வைட்டமின் ஈ மாத்திரையை கட் செய்து முட்டையின் வெள்ளை கருவில் போட்டு நன்கு கலக்கவும்.

பிறகு ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்து எடுக்கவும்.இதை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 2 முதல் 3 முறை அலசி சுத்தம் செய்யவும்.

இந்த கற்றாழை ஜெல்லை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு முட்டையின் வெள்ளை கரு உள்ள கிண்ணத்தில் இந்த ஜெல்லை போட்டு நன்கு கலக்கி கொள்ளவும்.

இந்த பேக்கை முகம் முழுக்க பூசி மஜாஜ் செய்யவும்.ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை வாஷ் செய்யவும்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம்,கொப்பளம்,கரும்புள்ளிகள் மறைந்து முகம் அதிக பொலிவாக காட்சி தரும்.