கொளுத்தும் வெயிலில் முகம் தங்கம் போல் தகதகன்னு மின்ன இந்த க்ரீமை யூஸ் பண்ணுகள்!!

0
139
#image_title

கொளுத்தும் வெயிலில் முகம் தங்கம் போல் தகதகன்னு மின்ன இந்த க்ரீமை யூஸ் பண்ணுகள்!!

கோடை காலத்தில் அதிக நேரம் வெயிலில் இருந்தால் முகம் கருமையாகும்.இதனால் முக அழகு தானாக குறைந்து விடும்.எனவே பங்குனி வெயிலிலும் முகம் தங்கம் போல் ஜொலிக்க இந்த க்ரீமை முகத்திற்கு அப்ளை செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி
2)மஞ்சள்
3)சர்க்கரை
4)காபி தூள்

செய்முறை:-

ஒரு தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்ட்டில் 1/4 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள்,1/2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

பிறகு அதில் 1/4 தேக்கரண்டி காபி தூள் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கி முகம் முழுவதும் அப்ளை செய்யவும்.1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை நன்கு கழுவவும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள்,டெட் செல்கள் நீங்கி முகம் பொலிவாக காணப்படும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு
2)சந்தன தூள்
3)கஸ்தூரி மஞ்சள் தூள்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சந்தன தூள்,1/4 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி முகம் முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகக் கருமை நீங்கி தங்கம் போல் மின்னும்.