இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்தினால் 2 மணி நேரத்தில் நரை முடியும் அனைத்தும் கருப்பாக மாறிடும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

Photo of author

By Divya

இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்தினால் 2 மணி நேரத்தில் நரை முடியும் அனைத்தும் கருப்பாக மாறிடும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

Divya

இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்தினால் 2 மணி நேரத்தில் நரை முடியும் அனைத்தும் கருப்பாக மாறிடும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

இன்றைய காலத்தில் பெரியவர்கள், சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் தலை முடி நரை பாதிப்பு இருக்கிறது. இதற்கு இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகிப்பது, தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது போன்றவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதற்கு இரசாயனம் கலந்த பொருட்களை தலைக்கு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தலை முடியை கருமையாக்க முயற்சிப்பது நல்ல பலனை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:-

*மருதாணி பொடி – 2 தேக்கரண்டி

*அவுரி பொடி – 5 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பவுலில் 2 தேக்கரண்டி மருதாணி பொடி மற்றும் 5 தேக்கரண்டி அவுரி பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்னர் சிறிதளவு வெதுவெதுப்பான நீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும். இந்த பேஸ்டை 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

பின்னர் எடுத்து பார்த்தால் கருமையாக இருக்கும்.கையுறை போட்டுக் கொண்டு இந்த ஹேர் டையை தலை முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். 1/2 மணி முதல் 3/4 மணி நேரம் வரை தலையில் ஊற வைத்து பின்னர் மைல்டானா ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். இவ்வாறு செய்தால் நரை முடி அணைத்தும் கருமையாக மாறி விடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*கருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

*பெரு நெல்லி – 3

*விளக்கெண்ணெய் – 1 தேக்கரண்டி

*வெந்தயம் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்துக் கொள்ளவும். அதில் 1 தேக்கரண்டி கருஞ்சீரகம் மற்றும் 1 தேக்கரண்டி வெந்தயத்தை சேர்க்கவும். அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.

மறுநாள் காலையில் ஊற வைத்துள்ள கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து விழுதாக்கி கொள்ளவும். இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து 3 பெரிய நெல்லிக்காயை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதன் விதைகளை மட்டும் நீக்கி விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பவுலில் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் சாற்றை வடிகட்டி கொள்ளவும்.

இந்த சாற்றை அரைத்து வைத்துள்ள கருஞ்சீரகம் + வெந்தய விழுதில் சேர்த்து கொள்ளவும். அடுத்ததாக விளக்கெண்ணெய் 1 தேக்கரண்டி அளவு எடுத்து அதில் கலந்து கொள்ளவும். இவ்வாறு செய்தால் ஹேர் டை தயார்.

பின்னர் இதை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி தடவிக் 1/2 மணி நேரம் முதல் 3/4 மணி நேரம் வரை விடவும். பின்னர் எந்த ஷாம்பும் பயன்படுத்தாமல் தலை முடியை நன்கு அலசவும். வாரத்தில் 2 அல்லது 3 முறை செய்து வருவதன் மூலம் இளநரை முழுவதும் அடர் கரு நிறமாக மாறி விடும்.