வீட்டில் உள்ள எலிகளை சாகடிக்காமல் நிமிடத்தில் வெளியேற்ற வேண்டுமா? அப்போ இதை ஒருமுறை ட்ரை பண்ணுங்க!!

0
31
#image_title

வீட்டில் உள்ள எலிகளை சாகடிக்காமல் நிமிடத்தில் வெளியேற்ற வேண்டுமா? அப்போ இதை ஒருமுறை ட்ரை பண்ணுங்க!!

நம்மில் பலர் வீடுகளில் எலி நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்த எலி அளவில் சிறியவை என்றாலும் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது. எலி தொல்லை இருக்கும் வீட்டில் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். இந்த ஆபத்து நிறைந்த எலிகளை விரட்ட நாமும் பல வழிகளை மேற்கொண்டு இருப்போம். ஆனால் பலன் ஏதும் கிடைத்தபாடில்லை என்பது தான் நிதர்சனம்.

*வீட்டிற்கு அருகில் சாக்கடை, டிச்சி உள்ளிட்டவைகள் இருந்தால் எலி பெருக்கம் அதிகம் இருக்கும். இதனால் எலிகள் வீட்டிற்குள் வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

*வீட்டிற்குள் உணவுப் பொருட்கள் சிதறிக் கிடந்தால் அதை மோப்பம் பிடித்துக் கொண்டு எலிகள் வீட்டிற்குள் வந்து விடும்.

*மண் தரை உள்ள வீடு, ஓட்டு வீடு, குடிசை வீடு ஆகியவற்றில் எலிகள் எளிதில் நுழைந்து உற்பத்தியாகி விடும்.

எலியால் பரவும் உயிருக்கு ஆபத்து நிறைந்த நோய்கள்:-

*லெப்டோஸ்பிரோசிஸ் எனும் மரணத்தை ஏற்படுத்தும் நோய் எலியின் சிறுநீர் மூலம் பரவுகிறது.

*ஹெப்படைடிஸ் ஈ என்ற கிருமிகள் எலியின் மூலம் பரவுகிறது.

*கொடிய நோயான பிளேக் நோய் எலியின் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.

எலித் தொல்லை நீங்க எளியத் தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*நெய் – 1/4 தேக்கரண்டி

*பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி

*மைதா மாவு – 2 தேக்கரண்டி

*நூல் கண்டு – சிறிதளவு

*நூல் அட்டை – 5 பீஸ்

செய்முறை:-

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் மற்றும் 2 தேக்கரண்டி மைதா மாவு சேர்க்கவும். மைதா மாவு இல்லாதவர்கள் கோதுமை மாவு அல்லது கடலை மாவை சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்து 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா (சமையல் சோடா) சேர்த்து கலந்து விடவும். பின்னர் 1/4 தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து விடவும்.

பிறகு துணி தைக்க உபயோகிக்கும் நூல் கண்டில் சிறிதளவு எடுத்து சிறு சிறு துண்டுகளாக கட் செய்து அதில் சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை நன்கு பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.

அடுத்து இதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு எடுத்து வைத்துள்ள நூல் அட்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் தயார் செய்து வைத்துள்ள மாவை சேர்த்து உருண்டை பிடிக்கவும்.

இந்த உருண்டைகளை எலி நடமாட்டம் இருக்கும் இடங்களில் வைத்தால் அதன் தொல்லை உடனடியாக நீங்கி விடும்.