பேன் தொல்லையை ஒழிக்க வேண்டுமா! பூசணிக்காய் விதையை இப்படி பயன்படுத்துங்கள்!!

0
70
#image_title

பேன் தொல்லையை ஒழிக்க வேண்டுமா! பூசணிக்காய் விதையை இப்படி பயன்படுத்துங்கள்!!

நம் தலையில் குடியிருந்து கொண்டு நம் தலையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஏற்படுத்தும் பேன் தொல்லையை ஒழிக்க பூசணிக்காய் விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மஞ்சள் பூசணிக்காய் பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. இந்த பூசணிக்காயை சாப்பிட்டு வந்தாலே உடலில் உள்ள பல நாய்கள் குணமடையும். மேலும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகரித்து கொடுக்கும். மேலும் வயிற்றுப்புண்களை குணப்படுத்தும் நாம் இதை பயன்படுத்தலாம்.

பூசணிக்காயில் பல வகையான சத்துக்கள் இருக்கின்றது. மாவுச்சத்து, புரதச்சத்து, விட்டமின் சி, கரோட்டின், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், துத்தநாகம், சுண்ணாம்புச் சத்து என பல வகையான சத்துக்கள் இருக்கின்றது. பூசணிக்காய் ஒன்றை சாப்பிட்டு வருவதன். முலம் நம் உடலுக்கு இந்த சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றது.

இந்த.மஞ்சள் பூசணிக்காயில் உள்ள விதைகளை நாம் மருந்தாக பயன்படுத்தலாம். இந்த பூசணிக்காயை விதைகளில் இருந்து ஒரு எண்ணெய் தயாரிக்கப்படுகின்றது. இந்த எண்ணெய் நம் உடலுக்கு நரம்பு டானிக் மருந்தாக பயன்படுகின்றது. இந்த பூசணிக்காய் விதைகளை வைத்து எவ்வாறு பேனை ஒழிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

* பூசணிக்காய் விதைகள்
* தேங்காய் எண்ணெய்

செய்முறை…

இதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதில் ஒரு பாத்திரம் வைத்துக் கொண்டு அதில் அரை லிட்டர் தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொண்டு கொதிக்க வைக்க வேண்டும்.

அதன் பின்னர் இதில் ஒரு கைப்பிடி அளவு பூசணிக்காய் விதைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்கு குதித்த பின்னர் அடுப்பை விட்டு இறக்கிவிட்டால் பூனை ஒழிக்கும் பூசணிக்காய் விதை எண்ணெய் தயார்.

இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பேன் தொல்லை நீங்கும். இதை வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் போதும். அவ்வாறு பயன்படுத்தி வரும்பொழுது முடி வளர்ச்சி அடையும். பொடுகுத் தொல்லை நீங்கும்.