முகத்தின் பொலிவை அதிகரிக்க வேண்டுமா!!! இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்!!!

0
32
#image_title

முகத்தின் பொலிவை அதிகரிக்க வேண்டுமா!!! இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்!!!

நம்முடைய முகத்தின் பொலிவை வெறும் மூன்று பொருள்களை வைத்து அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் அதற்கான பொருள்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய முகத்தின் பொலிவை அதிகரிக்க தேன், எலுமிச்சை, விட்டமின் ஈ மாத்திரை ஆகிய பயிர்களை பயன்படுத்தப் போகிறோம். இந்த மூன்று பொருள்களையும் இரண்டு வழிமுறைகளில் பயன்படுத்தி நமது முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம். அதை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.

வழிமுறை 1:

எலுமிச்சை மற்றும் விட்டமின் ஈ மாத்திரை…

எலுமிச்சை நமது சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றது. எலுமிச்சையில் உள்ள விட்டமின் சி நமது சருமத்திற்கு ஆக்சிஜனேற்றியாக பயன்படுகின்றது. சருமம் பொலிவை அதிகரிக்க எலுமிச்சை பெரிதும் உதவி செய்கின்றது.

முகத்தின் பொலிவை அதிகரிக்க முதலில் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும். பிறகு விட்டமின் ஈ மாத்திரையில் இருக்கும் எண்ணெயை தனியாக எடுத்து அந்த எண்ணெயை எலுமிச்சை சாவில் கலந்து நம் முகத்தில் தேய்த்துக் கொள்ளை வேண்டும். பின்னர் கைகளில் லேசாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும். 15-20 நிமிடங்கள் கழிந்து முகத்தை கழுவலாம். இதை தவிர்த்து செய்து வந்தால் நம்முடைய முகம் நிலவைப் போல ஜொலிக்கத் தொடங்கும்.

வழிமுறை 2:

தேன் மற்றும் விட்டமின் ஈ மாத்திரை…

தேனும் நமது முகத்தின் பொலிவை அதிகரிக்கக் கூடிய சிறந்த நிவாரணியாகும். தேனில் உள்ள ஆண்டி பாக்டீரியல் சத்துக்கள் நமது முகத்தில் உள்ள முகப் பருக்களை நீக்க உதவி செய்கின்றது. மேலும் முகத்தில் இருக்கின்ற தழும்புகள் அனைத்தையும் மறையச் செய்கின்றது. தேன் நமது முகத்திற்கு ஈரப்பதத்தை வழங்கி அதை பராமரிக்கவும் செய்கின்றது.

முகத்தின் பொலிவை அதிகரிக்க தேன் சிறிதளவு எடுத்துக் கொண்டு அதில் விட்டமின் ஈ மாத்திரையின் எண்ணெயை சேர்த்து கலந்து கொண்டு இதை முகத்தில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள வறட்சி, வீக்கம், சுருக்கங்கள் அனைத்தும் நீங்கும். மேலும் முகம் பொலிவாகத் தொடங்கும். இரவு நேரத்தில் தூங்கச் செல்லும் முன்பு இதை பயன்படுத்த வேண்டும்.