வீண் செலவு குறைந்து பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை கடைபிடித்து பாருங்கள்!!

0
40
#image_title

வீண் செலவு குறைந்து பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை கடைபிடித்து பாருங்கள்!!

நவீன உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதோ ஒரு வழியில் அவை செலவாகி விடுகிறது என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் சில ஆன்மீக வழி முறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.

அந்த வகையில் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி அதன் வரவு அதிகரிக்க வீட்டு பூஜை அறையில் தினமும் லட்சுமி குபேர விளக்கேற்றி வழிபட வேண்டும். இப்படி செய்வதால் நமக்கு ஏற்படும் செலவுகள் குறைந்து வரவு அதிகரிக்கும்.

பண வரவு அதிகரிக்க எளிய என்ன செய்ய வேண்டும்?

வீட்டில் லட்சுமி குபேர விளக்கு ஏற்றி வைத்தால் நம்மை நோக்கி எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அதை எதிரித்து துணிந்து போராடும் மன தைரியம் நம்மில் பிறக்கும் என்பது ஐதீகம்.

தேவைப்படும் பொருட்கள்:-

*லட்சுமி குபேர விளக்கு

*தீப எண்ணெய்

*ஏலக்காய்

*திரி

*தண்ணீர்

*பன்னீர்

*பூ

*பாத்திரம்

செய்முறை விளக்கம்…

முதலில் தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் பூஜை அறையில் உள்ள லட்சுமி குபேர விளக்கில் தீப எண்ணெய் ஊற்றி அதில் செல்வதை பெருக்கும் குபேர நாணயம் போடவும். பின்னர் லட்சுமி தாயாருக்கு பிடித்த வாசனை நிறைந்த பொருட்களில் ஒன்றான ஏலக்காய் விதைகளை அதில் சேர்த்து கொள்ளவும். அடுத்து விளக்கு திரி ஒன்றை அதில் வைக்கவும்.

அடுத்து எச்சில் படாத பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் சுத்தமான தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் வாசனை நிறைந்த பன்னீர் ஊற்றி அதில் பூஜைக்கு பயன்படுத்தும் பூக்களில் ஏதேனும் ஒரு வகையை அதில் போடவும்.

பின்னர் செல்வத்தை அள்ளி தரும் மகாலட்சுமி தாயாரையும்,குபேரரையும் மனதில் நினைத்து லட்சுமி குபேர விளக்கை ஏற்றவும். இந்த விளக்கை அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றி வழிபட வேண்டும்.
.
இந்த விளக்கை தினமும் ஏற்ற முடியாத பட்சத்தில் குபேரருக்கு உகந்த நாளான வியாழக்கிழமை அல்லது லட்சுமி தாயாருக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் லட்சுமி குபேர விளக்கை ஏற்றி வழிபட்டால் வீட்டில் செலவு குறைந்து வரவு அதிகரிக்கும்.