குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளித்தால் என்ன நடக்கும்!!?

0
52
#image_title

குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளித்தால் என்ன நடக்கும்!!?

நாம் குளிக்கும் நீரில் எலுமிச்சை சாறு கலந்து குளித்தால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எலுமிச்சையில் பல நன்மைகள் உள்ளது. இதில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குறிப்பாக உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்துக்கள் இதில் அதிகளவில் இருக்கின்றது.

சாதாரணமாக எலுமிச்சை சாறு குடிக்கும் பொழுது என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி நம் எல்லாருக்கும் ஓரளவு தெரியும். அதே போல எலுமிச்சை சாற்றை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால் என்ன நடக்கும் என்பது பற்றி நம்மில் ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும். இந்த பதிவை பார்த்த பிறகு நீங்களும் குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குளிக்கச் தொடங்குவீர்கள்.

எலுமிச்சை சாற்றை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கும் பொழுது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அது என்னென்ன என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

எலுமிச்சை சாற்றை குளிக்கும் நீரில் கலந்து குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

* குளிக்கும் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு எலுமிச்சை பழங்களை பிழிந்து நன்றாக கலந்து குளித்து வர வேண்டும்.

* குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளிக்கும் பொழுது சருமத்திற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றது.

* குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளித்தால் நமது உடலில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும்.

* எலுமிச்சை சாற்றை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வந்தால் வாசனை திரவியம் பூசாமலேயே உடல் வாசனையாக இருக்கும்.

* குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளித்தால் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் திட்டுக்கள் அனைத்தும் மறையாத தொடங்கும்.

* குளிக்கும் பொழுது தண்ணீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குளித்து வந்தால் தோலில் ஏற்படும் சுருக்கத்தையும் மெல்லிய கோடுகளையும் நீக்க உதவி செய்கின்றது.

* எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து குளித்தால் நமது உடலில் எண்ணெய் சுரப்பை அதிகரிக்கும்.

* நாம் குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குளித்து வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கின்றது.