தன்னையே திருமணம் செய்துகொண்ட வித்தியாசமான பெண்… இப்போது ஹனிமூனுக்கு ப்ளான்!

Photo of author

By Vinoth

தன்னையே திருமணம் செய்துகொண்ட வித்தியாசமான பெண்… இப்போது ஹனிமூனுக்கு ப்ளான்!

Vinoth

தன்னையே திருமணம் செய்துகொண்ட வித்தியாசமான பெண்… இப்போது ஹனிமூனுக்கு ப்ளான்!

வித்தியாசமான செயல்கள் மூலமாக அடிக்கடி மக்கள் மத்தியில் பிரபலமாகும் சில நபர்கள் இருப்பார்கள். அப்படி ஒரு பெண்ணாகதான் ஷமா சில மாதங்களுக்கு முன்னர் மக்களின் பேசுபொருளானார்.

குஜராத்தைச் சேர்ந்த 24 வயதான க்ஷமா பிந்து, தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் வைரலானார். இது சம்மந்தமாக அப்போது கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இப்போது தனது அடுத்த கட்டத்திற்குத் தயாராகி வருகிறார் – கோவாவில் ஒரு தனியான தேனிலவு செல்ல உள்ளாராம்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “நான் அழகான அரம்போல் கடற்கரையில் நிறைய நேரம் செலவிடுவேன், அங்கு யாரும் என்னைப் பார்க்காமல் நான் பிகினி அணிய முடியும். கடற்கரை பல நிகழ்வுகளை நடத்துகிறது மற்றும் கோவாவில் எனக்கு பிடித்த மற்றும் கனவு இடங்களில் ஒன்றாகும்,” என்று அவர் கூறினார்.

மேலும் தேனிலவில் என் கணவனைப் பற்றி மக்கள் கேட்டால் என்ன செய்வது என்று எனக்கு தெரியும். “நான் தேனிலவில் இருக்கும்போது, ​​நான் திருமணமானவள் என்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள், என் கணவரைப் பற்றி வெளிப்படையாகக் கேட்பார்கள். அப்போது நான் ஏன் என்னைத் திருமணம் செய்துகொண்டேன் என்பதைப் பற்றி அவர்களுக்கு விளக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்,” என்று அவர் கூறினார்.