இரு புறமும் இயக்கும் மிக நீளமான மற்றும் அனைத்து வசதிகளும் உள்ளேயே இருக்கும் அமெரிக்கன் ட்ரீம்!

The longest running on both sides and the American Dream with all the amenities inside!

இரு புறமும் இயக்கும் மிக நீளமான மற்றும் அனைத்து வசதிகளும்  உள்ளேயே இருக்கும் அமெரிக்கன் ட்ரீம்! உலகின் மிக நீளமான அமெரிக்கன் ட்ரீம் என்ற காரை மறு சீரமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமெரிக்கன் ட்ரீம் என்ற காரானது உலகின் மிக நீளமான கார் என்று கின்னஸ் புத்தகத்தில் 1986 ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. இந்த கார் 100 அடி நீளம் கொண்டது அதாவது 30.5 மீட்டர் அளவுக்கு நீளமானது. மேலும் நாம் … Read more

உலகம் முழுவதும் நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 25 கோடியை கடந்தது!

உலகம் முழுவதும் நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 25 கோடியை கடந்தது!

உலகம் முழுவதும் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும் நோய் தொற்று பிறந்த நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டு மொத்த எண்ணிக்கை 25.21 கோடியைத் தாண்டியிருக்கிறது. இதனடிப்படையில் உலகம் முழுவதும் தற்போது 25 கோடியே 31 லட்சத்து 82 … Read more

குடும்பத்திற்கு பணம் கொடுக்க முடியாமல் கொலை செய்த என்ஜீனியர்! அமெரிக்க கோர்ட் செய்த அதிரடி!

Engineer killed for not being able to pay family! Action by the American Court!

குடும்பத்திற்கு பணம் கொடுக்க முடியாமல் கொலை செய்த என்ஜீனியர்! அமெரிக்க கோர்ட் செய்த அதிரடி! அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனராக இருந்தவர் சங்கர் நாகப்பா ஹங்குட். 55 வயதான இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் கலிபோர்னியாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 2019 ம் ஆண்டு இவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை படுகொலை செய்துவிட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சங்கர் நாகப்பா … Read more

6 மாதங்கள் விண்வெளியில் தங்க இருக்கும் நபர்கள்! நான்கு பேரை தேர்வு செய்த நாசா!

Persons who stay in space for 6 months! NASA selects four people!

6 மாதங்கள் விண்வெளியில் தங்க இருக்கும் நபர்கள்! நான்கு பேரை தேர்வு செய்த நாசா! அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் நான்கு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப தயார் செய்துள்ளது. இந்த பயணத்தில் ஒரு மூத்த விண்வெளி வீரரும், எதிர்கால சந்திர பயணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இளைய விண்வெளி வீரர்கள், மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் என நான்கு பேரை தேர்வு செய்து வைத்துள்ளது. … Read more

செவ்வாய் கிரகத்தில் வரும் காலங்களில் மனிதர்கள் வாழலாம்! ஆதாரமாக வெளியிட்ட புகைப்படங்கள்!

Humans can live in the coming seasons on Mars! Source Published Photos!

செவ்வாய் கிரகத்தில் வரும் காலங்களில் மனிதர்கள் வாழலாம்! ஆதாரமாக வெளியிட்ட புகைப்படங்கள்! செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழவும், உயிரினங்கள் வாழவும் ஏற்ற சூழல் உள்ளதா? என்ற ஆய்வு பல ஆண்டுகளாகவே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மேற்கொண்டு வருகிறது. அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பெர்சவரன்ஸ் என்ற ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. மேலும் கடந்த … Read more

தொடர் கனமழை பெய்து வருவதால் வேகமாக நிரம்பி வரும் மேட்டூர் அணை!

mettur-dam-overflows-due-to-continuous-heavy-rains

தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை 2 நாட்களில் நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வீடு மற்றும் சாலையோரங்களில் குளம் குட்டையாக காணப்படுகிறது. தலைநகர் சென்னையில் தொடர் கனமழையால் திரும்பும் இடமெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. ஏரிகள், ஆறுகளில் உபரிநீர் … Read more

போலீசார் மீது கொலை தாக்குதல்! பதிலடியாக சுட்டு படுகொலை!

Murder attack on police! Massacre in retaliation!

போலீசார் மீது கொலை தாக்குதல்! பதிலடியாக சுட்டு படுகொலை! பிரான்ஸ் நாட்டில் கெனிஸ் நகரில் காவல்நிலையத்தில் போலீசார் சிலர் எப்போதும் போல இன்று காலை ரோந்து பணிக்கு செல்வதற்காக காரில் ஏறிப் புறப்பட்டனர். அப்போது அந்த காவல் நிலையத்திற்குள் இருந்த புது நபர் ஒருவர் போலீஸ் உட்கார்ந்திருந்த காரின் கதவைத் திறந்தார். மேலும் உடனடியாக தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரி மீது தாக்குதலும் நடத்தினார். சற்றும் எதிர்பாராத … Read more

சென்னையில் பரிதாபம்! உணவு, உடைக்காக சண்டை போட்டுக்கொள்ளும் மக்கள்?

awful-in-chennai-people-fighting-for-food-and-clothing

சென்னையில் பெய்து வரும் கனமழையினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த பொதுமக்கள், அடிப்படை தேவைகளுக்காக மாறி மாறி சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக வடதமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால், வீடு மற்றும் உடமைகளை இழந்து, பொதுமக்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் கனமழை … Read more

தொடர் கனமழையின் காரணமாக பரவும் காய்ச்சல்! கோவை மாவட்டத்தில் தனி பிரிவு.

fever-spreading-due-to-continuous-heavy-rains-the-separate-section-icoimbatore-district

கோவை மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அவர்கள் தெரிவித்துள்ளார் கோவை மாவட்டத்தில் சுமார் இரண்டு வார காலமாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குழந்தைகள்,மற்றும் பெரியவர்கள் என அனைத்து மக்களும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக வரும் … Read more

67 வயதில் தனி மனிதராக காஷ்மீர் டு கன்னியாகுமாரி வரை சைக்கிள் பயணம்!

the-old-man-cycling-from-kashmir-to-kanyakumari-as-an-individual-at-the-age-of-67

கன்னியாகுமரியில் 67 வயது முதியவர் ஒருவர் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்து சாதனை படைத்திருப்பது பெரும் சாதனை தான். இதிலிருந்து தெரிவது என்னவென்றால், வாழ்க்கையில் சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் ஶ்ரீநகரில் இருந்து சைக்கிளில் தனி மனிதராக பெரியவர் ஒருவர் 3,650 கிலோ மீட்டர் தொலைவான கன்னியாகுமரிக்கு, வெறும் 12 நாள் 18 மணிநேரத்தில் வந்து சாதனை படைத்துள்ளார் . இவர் பெயர் மொஹிந்தர் சிங் பாராஜ் வயது … Read more