குருவி கூட்டத்திற்காக தனது  காரையே வழங்கிய துபாய் இளவரசர்!! பாரி வள்ளலே!!

குருவி கூட்டத்திற்காக தனது  காரையே வழங்கிய துபாய் இளவரசர்!! பாரி வள்ளலே!!

துபாயின் இளவரசனாக திகழும் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம். இவர் ஃபாஸ்ஸா என்று பிரபலமாக அறியப்படுகிறார். இவர் காரில் முன்பக்கத்தில் ஒரு குருவி கூடு கட்டியுள்ளது. இதைப்  பார்த்த இளவரசி அந்தக் காரை  எடுத்துச் செல்லாமல், அங்கே நிறுத்தி வைத்துவிட்டு,அந்தக் குருவிக் கூட்டை யாரும்  தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அந்தக் குருவிக்கு அந்த காரை பரிசளித்து விட்டார். இவர் பொதுவாக விலங்குகள் பறவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அன்பு காட்டுவாராம். குறிப்பாக இவர் … Read more

ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகளை மீறும் மக்கள்

ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகளை மீறும் மக்கள்

உலகம் முழுவதும் கொரோனா 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் கடுமையான சட்டங்களை போட்டாலும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றி வருகின்றனர் மெல்பர்ன் நகரில் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அங்குள்ள மக்கள் வேண்டுமென்றே  கட்டுப்பாடுகளை மீறிவருவதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் போராடி வந்தாலும் சிலர் காவல்துறையையும் தாக்குகின்றனர். அங்கு விக்டோரியா மாநிலத்தில் தான்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  அதிகம். … Read more

யார் இந்த இலோன் மஸ்க்?

யார் இந்த இலோன் மஸ்க்?

இலோன் மஸ்க் என்பவர் தென்னாப்பிரிக்கா நாட்டை சார்ந்தவர் ஆவார். அவரது வாழ்கைகயில் பல சோதனைகளை கடந்து உலக அளவில் பணக்காரர்களின் பட்டியலில் 9வது இடம் பிடித்துள்ளதாக Bloomberg Billionaires Index தெரிவித்துள்ளது. அவரின் வெற்றிப் பயணத்தில் பெரிய தடையாக 12 வருடத்திற்கு முன்பு வந்த நிதி நெருக்கடிதான்.  செலவுக்கே, வங்கிகளிடம் தனிநபர் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் இருந்தும் தனது கடின முயற்சியை ஒருபோதும் கைவிடாத அவர் தற்போது Tesla நிறுவனத்தின் மூலம் 10 பணக்காரர்களின் பட்டியலில் … Read more

தென்கொரியாவில் வெள்ளப்பெருக்கு

தென்கொரியாவில் வெள்ளப்பெருக்கு

சில நாள்களாக தென்கொரியாவில் கனமழை பெய்து வந்து நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது பலமான காற்று வீசியதில் கிடங்குகள், கால்நடை கூடாரங்கள் வீடுகள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் விவசாய நிலங்கள் ஐந்தாயிரம் ஹெக்டருக்கும் மேல் பாதிக்கபட்டுள்ளன. அந்நாட்டின் தலைநகரான சியோலிலும் சாலைகள் மற்றும் பாலங்கள் என சில பகுதிகள் சேதாரமடைந்துள்ளன. பாதுகாப்பாக மக்களை மீட்க அந்நாட்டு அரசாங்கம் 45,000-க்கும் மேற்பட்ட மீட்பு படைகள் மற்றும் தன்னார்வத் தொழிலாளர்களையும் பணியமர்த்தியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 15 பேர் உயிரிழந்ததாகவும் … Read more

நம்பிக்கை இழக்காமல் போராட வேண்டும் – உலக சுகாதார அமைப்பு

நம்பிக்கை இழக்காமல் போராட வேண்டும் - உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் இயல்புநிலைக்கு  திரும்ப போராடி கொண்டிருக்கிறது. இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சத்தை கடந்துள்ளது அதே சமயத்தில் ஒரு கோடியே 16 லட்சம் பேர் இந்த பாதிப்பிலிருந்து குனமடைந்துளனர். அமெரிக்கா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடதில் உள்ளது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒன்றரை லட்சத்தை தாண்டியது.  பிரேசில் 2 வது இடத்திலும் இந்தியா 3வது இடத்திலும் உள்ளது இந்த நிலையில் உலக … Read more

பெரும் துயரில் ஆழ்ந்த ஐ.நா சபை? காரணம்??

பெரும் துயரில் ஆழ்ந்த ஐ.நா சபை? காரணம்??

உலகையே உலுக்கிப் போட்ட கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் கல்வி வளர்ச்சியில் வரலாறு காணாத பின்னடைவு ஏற்பட்டதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து  அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரேஸ் வெளியிட்ட வீடியோவில்  கூறியதாவது: ஜூலை  மாதத்தில் மட்டும் உலகம் முழுவதும்160-க்கு  மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் 100 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் 4 கோடி ஆரம்ப கல்வி கிடைக்காமல் போனது. பெண் கல்விக்காக பல ஆண்டுகள் தீவிர முயற்சி … Read more

வெளிநாட்டுப் பெண்ணின் இந்திய விவசாய அனுபவம்!!

வெளிநாட்டுப் பெண்ணின் இந்திய விவசாய அனுபவம்!!

கொரோனா தொற்றால் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக விமான சேவை முடங்கி உள்ளதால், நான்கு மாத காலமாக கர்நாடகாவில் தங்கி, கிராமப்புற வாழ்க்கையை அனுபவித்து, உள்ளூர் மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொண்டுள்ளார் ஒரு ஸ்பெயின் நாட்டு குடிமகள் ட்ரெசா சொரியானோ. ஸ்பெயினின் நகரமான வலென்சியாவைச் சேர்ந்தவர் ட்ரெசா சொரியானோ (வயது 34). இவர் தொழில்துறை வடிவமைப்பாளராக உள்ளார். இவர் இந்தியா மற்றும் இலங்கையை சுற்றிப் பார்க்க கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்து சேர்ந்தார். இந்தியாவில் கொரோனா … Read more

வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க டிரம்ப் திட்டவட்டம்

வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க டிரம்ப் திட்டவட்டம்

நவம்பர் மாதத்துக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. நீண்ட ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக தலீபான் பயங்கரவாதிகளுடன் பிப்ரவரியில் அமெரிக்கா அமைதிக்கான ஒப்பந்தத்த்தை கையெலுத்திட்டது. தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கு வீரர்களை முழுமையாக திரும்ப பெறுவதாக அமெரிக்கா உத்தரவாதம் அளித்தது. இது குறித்து டிரம்ப் ஆப்கானிஸ்தானில் நமது வீரர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக குறைத்தோம் அதை திரும்பவும் 4 … Read more

டிரம்ப் அதிரடி உத்தரவு

டிரம்ப் அதிரடி உத்தரவு

உலக நாடுகளில் எச்1 பி’ விசாவை அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். முக்கியமாக தகவல் தொழில் நுட்பத்துறையில் சார்ந்தவர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த விசாவானது மூன்று ஆண்டுகள் என நிர்ணியக்கபட்டு இருக்கும் தேவைப்பட்டால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம் ஆனால் டிரம்ப்  பதவிக்கு வந்ததிலிருந்து  “அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே” என்ற கொள்கையை கூறி வருகிறார். இதன் காரணமாக இந்த விசாவிற்கு கடும் கட்டுபாடுகளை விதித்து வருகிறார் அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் அரசின் … Read more

இலங்கையில் பொதுத் தேர்தல்

இலங்கையில் பொதுத் தேர்தல்

கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கையில் 5 மாதத்திற்கு பிறகு மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.  கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த  பாராளுமன்ற  தேர்தலில் ராஜபக்சே  வெற்றி பெற்றார் ஆனால் எதிர்பாரத விதமாக  பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பே பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார்.  அதன் காரணமாக  மார்ச்சில்   நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. முககவசம் அணிந்து வர வேண்டும் எனவும் வாக்காளர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களுக்கு … Read more