கை கால் நரம்பு வலியா இனி கவலைப்பட வேண்டாம்!! வீட்டில் இருந்தே சரி செய்து விடலாம்!!

0
37

கை கால் நரம்பு வழியா இனி கவலைப்பட வேண்டாம்!! வீட்டில் இருந்தே சரி செய்து விடலாம்!!

இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுப் பொருட்களும் உடல் உழைப்பில்லாமல் செய்யப்படும் வேலைகளும் நமது உடலின் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகின்றது.

இதனால் எலும்புகள் பாதிக்கப்படுவதோடு நிறைய உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளும் வருகின்றது.

அதுமட்டுமல்லாமல் உடலின் செயல்பாடுகள் குறைவதனால் தசை பிடிப்புகள் நரம்பு வலி போன்றவை ஏற்படுகின்றது.

அதிலும் குறிப்பிட்டு சொல்லப்போனால் சியாட்டிக்கா என்ற நரம்பு வலி நம்மில் பலருக்கும் ஏற்படுகின்றது அது ஆண்களை விட பெண்களை தான் மிகவும் அதிக அளவு பாதிக்கின்றது.

பெண்களுக்கு உடல் பலவீனம் குறைவதால் அனைத்து நோய்களும் சுலபமாக வருகின்றது.

அப்படி வரும் நரம்பு பிரச்சனைகளில் மிகவும் குறிப்பிட்டு கூறப்படுவதாக இந்த சியாட்டிக வலியை கூறலாம் அப்படி இந்த சியாட்டிக் வழி என்றால் இது ஒரு நரம்பு வலியாகும்.

இந்த சியட்டிகா என்பது ஒரு நரம்பின் பெயர் ஆகும் நமது உடலில் ஏற்படும் நரம்பு வலிகளில் மிகவும் தாங்க முடியாத வலியை கொடுப்பது இந்த நரம்பு வலி ஆகும்.

இந்த நரம்பு நமது முதுகில் தோன்றி காலின் குதிங்கால் வரை இருக்கும். இந்த சியாட்டிக் நரம்பு வலி ஏற்படுகிறது என்பதற்கான அறிகுறிகள் என்னவென்றால் முதுகு வலி, கால் பின்புறத்தில் வலி, இடுப்பு வலி, கால் நகர்த்துவதில் சிரமம், கால் விரல்களில் வலி இவை அனைத்தும் இதற்கான முன் அறிகுறிகள் ஆகும்.

இதனை நீங்கள் சரி செய்வதற்கு எங்கேயும் செல்லாமல் சுலபமாக வீட்டிலிருந்தே குணப்படுத்தி விடலாம.

தேவையான பொருட்கள்

வெந்தயம்

பூண்டு

பால்

செய்முறை

இதனை நீங்கள் வீட்டில் உள்ள எளிய முறையில் மூலமாகவே சரி செய்து விடலாம்.

1: முதலில் வெந்தயத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

2: நன்கு ஊறிய வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

3: பின்பு அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து கொள்ள வேண்டும்.

4: அதன்பின் எந்த பகுதிகளில் எல்லாம் வலி ஏற்படுகிறதோ அந்த இடத்தில் எல்லாம் நன்கு தேய்த்து விட வேண்டும்.

இவற்றை நீங்கள் வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்தாலே போதும் இந்த வலி உங்களை விட்டு நீங்கிவிடும்.

இவ்வாறு வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தேன் கால் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து உடல் வலிதொந்தரவுகளையும் போக்கிவிடலாம்.

 

author avatar
Parthipan K