இளநரை? இந்த டையை தடவினால் ஒரே நாளில் அனைத்து முடிகளும் கருப்பாக மாறிவிடும்!!

0
31
#image_title

இளநரை? இந்த டையை தடவினால் ஒரே நாளில் அனைத்து முடிகளும் கருப்பாக மாறிவிடும்!!

நவீன காலத்தில் எல்லோருக்கும் இருக்கும் மிக பெரிய பிரச்சனை இளநரை. இதற்கு உணவுப் பழக்க வழக்கங்கள்,மன அழுத்தம் காரணங்களாக சொல்லப்பட்டாலும் தலை முடியை சரியாக பராமரிக்காமல் இருப்பதும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

இளநரை ஏற்படக் காரணங்கள்:-

*முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள்

*மன அழுத்தம்

*இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தால்

*முறையற்ற தூக்கம்

இளநரையை இயற்கை வழியில் சரி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*கரிசலாங்கண்ணி பொடி

*மருதாணி பொடி

*வேப்பிலை பொடி

*செம்பருத்தி பொடி

*வெந்தயம்

*பச்சை கற்பூரம்

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் 2 தேக்கரண்டி அளவு கரிசலாங்கண்ணி பொடி, 1 தேக்கரண்டி மருதாணி பொடி, 1 தேக்கரண்டி வேப்பிலை பொடி, 1 தேக்கரண்டி செம்பருத்தி பொடி, 1 தேக்கரண்டி வெந்தயம் மற்றும் 1 துண்டு பச்சைக் கற்பூரம் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி நன்கு மைய்ய அரைத்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பவுலில் அவற்றை ஊற்றி தலை முடியின் வேர்பகுதியில் இந்த இயற்கை ஹேர் டையை தடவி ஒரு மணி நேரத்திற்கு பிறகு சீகைக்காய் பயன்படுத்தி தலையை நன்கு அலச வேண்டும்.

இந்த ரெமிடியை வாரத்திற்கு 3 முறை தலைக்கு பயன்படுத்தி வருவதன் மூலம் தலையில் உள்ள இளநரை அனைத்தும் கருப்பாக மாறிவிடும்.