நரை முடியை கருப்பாக்கும் 100% இயற்கை ஹேர் டை – தயாரிப்பது எப்படி?

0
64
#image_title

நரை முடியை கருப்பாக்கும் 100% இயற்கை ஹேர் டை – தயாரிப்பது எப்படி?

இன்று நரை பாதிப்பு இளம் வயதிலேயே பெரும்பாலானோருக்கு வந்து விடுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் பிரச்சனை, கெமிக்கல் ஷாம்பு அதிகளவு தலைக்கு உபயோகித்தால் போன்ற பல காரணங்களால் நரை பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நரையை கருப்பாக்க கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தாமல் வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட இயற்கை ஹேர் டை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கரிய பவளம்
2)பெரு நெல்லிக்காய்

கரிய பவளம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். 30 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.

செய்முறை:-

3 அல்லது 4 பெரு நெல்லிக்காயை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

பிறகு ஒரு கிண்ணத்திற்கு அரைத்த நெல்லிக்காய் சாற்றை வடிகட்டி கொள்ளவும். அதன் பின்னர் ஒரு துண்டு கரிய பவளத்தை நெல்லிக்காய் சாற்றில் போட்டு 3 மணி நேரம் வரை ஊற வைக்கவும். இவ்வாறு செய்தால் இயற்கையான ஹேர் டை தயாராகி விடும்.

இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்தி ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் நரை முடி அனைத்தும் கருமையாக மாறும்.