2 கொய்யா இலை இருந்தால் புற்றுநோயை ஓட ஓட விரட்டிடலாம்..!!

0
182
#image_title

2 கொய்யா இலை இருந்தால் புற்றுநோயை ஓட ஓட விரட்டிடலாம்..!!

மனித உயிரை பறிக்கும் ஆபத்தான நோய்களில் ஒன்று புற்றுநோய். உடலுக்கு அடிப்படையான செல்களை பாதிக்கும் நோய் இவை. இவை ஒரு தொற்று நோய் இல்லை. உடலில் வயிறு, நுரையீரல், உணவுக்குழாய், குடல், மார்பகம், கர்ப்பப்பை, வாய் உள்ளிட்ட இடங்களில் இவை உருவாகும்.

புற்றுநோய் ஏற்படக் காரணங்கள்:-

*புகைபிடித்தல்

*புகையிலை உபயோகித்தல்

*சுற்றுப்புறச் சூழ்நிலை

*மாசு மற்றும் நச்சு தன்மை கொண்ட வேலை

*உணவு முறை

*பரம்பரைத் தன்மை

புற்றுநோய் அறிகுறிகள்:-

*குரலில் திடீர் மாற்றம்

*தொடர் இருமல்

*தொண்டை அடைப்பு

*மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் மாற்றம்

*உடலில் கட்டிஉருவாகுதல்

*எடை குறைவு

*பெண்களுக்கு மாதவிடாயின் போது அதிக இரத்த போக்கு

இந்த புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்க கொய்யா இலை பெரிதும் உதவுகிறது. இந்த இலையில் பொட்டாசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் சி மற்றும் பி6
கால்சியம், இரும்பு, மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இந்த இலையில் டீ செய்து பருகி வருவதன் மூலம் உடலில் புற்றுநோய் செல் உருவாவதை தடுக்க முடியும்.

தேவையான பொருட்கள்:-

*கொய்யா இலை

*தண்ணீர்

செய்முறை:-

முதலில் கொய்யா இலையை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள கொய்யா இலைகளை சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க வைக்கவும். கொய்யா இலை சாறு கொதிக்கும் நீரில் இறங்கியதும் அடுப்பை அணைத்து 2 நிமிடம் ஆற விட்டு வடிகட்டி பருகவும். ஒவ்வொரு நாளும் இதை செய்து பருகி வந்தால் புற்றுநோய் பாதிப்பு குணமாகும்.