வாயுத் தொல்லையை 2 நிமிடத்தில் சரி செய்ய உதவும் கஷாயம் – தயார் செய்வது எப்படி?

0
41
#image_title

வாயுத் தொல்லையை 2 நிமிடத்தில் சரி செய்ய உதவும் கஷாயம் – தயார் செய்வது எப்படி?

இன்றைய நவீன உலகில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உணவு செரிக்காமை, உரிய நேரத்தில் மலத்தை கழிக்காமை, எண்ணெயில் பொரித்த உணவு அதிகளவு உண்ணுதல் உள்ளிட்ட காரணங்களால்ஏற்படும் வாயுத் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம்.

வாயுத் தொல்லைக்கான அறிகுறிகள்:-

*சாப்பிட்ட உடன் வயிறு வீக்கம்

*வயிறு உப்பசம்

*தொடர் ஏப்பம்

*ஆசன வாய் வழியாக தொடர்ந்து கெட்ட வாயு வெளியேறுதல்

வாயுத் தொல்லை ஏற்படக் காரணங்கள்:-

*எளிதில் செரிக்காத உணவு

*மலத்தை அடக்கி வைப்பது

*அதிக காரம் நிறைந்த உணவை உண்ணுதல்

*துரித உணவை அதிகளவில் எடுத்துக் கொள்ளுதல்

*மன அழுத்தம்

வாயுத் தொல்லையை சரி செய்ய உதவும் கஷாயம் – தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*கற்பூரவல்லி – 3

*மிளகு – 5

*சீரகம் – 1/4 தேக்கரண்டி

*பூண்டு – 2

*மஞ்சள் – சிட்டிகை அளவு

*உப்பு – சிறிதளவு

*ஓமம் – சிறிதளவு

செய்முறை…

முதலில் 3 கற்பூரவல்லி இலையை எடுத்து சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பின்னர் ஒரு உரலில் 5 மிளகு, 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து இடித்தெடுத்துக் கொள்ளவும்.

பின்னர் 2 பூண்டு பற்களை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள கற்பூரவல்லி இலை, இடித்த மிளகு, சீரகம் சேர்த்து கொள்ளவும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்கள், ஓமம் சிறிதளவு, மஞ்சள் தூள் சிட்டிகை அளவு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 1 14 கிளாஸ் தண்ணீர் சுண்டி 1 கிளாஸ் என்று வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை 1 டம்ளருக்கு வடிகட்டி அதில் சிறிதளவு உப்பு சேர்த்து பருகவும். இவ்வாறு செய்தால் நாள்பட்ட வாயுத் தொல்லை பிரச்சனை சில நிமிடத்தில் சரியாகும்.