வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதினால் உடலுக்கு ஏற்படும் 5 நன்மைகள்!!

0
63
#image_title

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதினால் உடலுக்கு ஏற்படும் 5 நன்மைகள்!!

மனித உடல் ஆரோக்கியமாகவும்,சீராகவும் இயங்க தண்ணீர் மிகவும் அவசியம்.ஒருவர் உணவு இல்லாமல் கூட நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்து விட முடியும்.ஆனால் தண்ணீர் இல்லாமல் 1 நாளை கடத்துவதே பெரும் சவாலாக இருக்கும்.இதை தான் “நீரின்றி அமையாது உலகு” என்று திருவள்ளுவர் அன்றே கூறியிருக்கிறார்.

நம் முன்னோர்கள் தினமும் 5 லிட்டர் தண்ணீரை பருக வேண்டுமென்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.காரணம் தேவையான அளவு தண்ணீர் உடலில் இருந்தால் தான் உடலில் உள்ள உறுப்புக்கள் அதன் வேலையை சிறப்பாக செய்யும்.நோய் பாதிப்பும் ஏற்படாது.தண்ணீரிலில் கலோரியின் அளவு பூஜ்ஜியம் என்பதினால் உடல் எடை குறைப்பதில் இவை முக்கிய தீர்வாக இருக்கும்.அதேபோல் தண்ணீரில் 5 மில்லி கிராம் சோடியம்,கால்சியம் 3 மில்லி கிராம் மற்றும் மெக்னீசியம் 1 மில்லி கிராம் இருக்கிறது.

ஆனால் நவீன கால வாழ்க்கை முறையில் தண்ணீரலும் கலப்படம் ஏற்பட்டு விட்டது.தண்ணீரை காசு கொடுத்து வாங்கி பருகும் நிலை உருவாகிவிட்டது.சரி காசு கொடுத்து வாங்கினாலும் பயன் இருக்கிறதா? என்றால் அதுவும் கேள்வி குறி தான்.கேன் வாட்டர்,பிளாஸ்டிக் பாட்டில் வாட்டர்,பில்டர் வாட்டர் உள்ளிட்டவை அதன் உண்மையான சுவையை இழந்து பின் தான் நமக்கு கிடைக்கிறது.

தற்பொழுது குடிக்க பயன்படுத்தி வரும் தண்ணீரில் கிருமிகள்,பாக்டீரியாக்கள் அதிகளவில் இருப்பதால் டைபாய்டு,காலரா உள்ளிட்ட பாதிப்புகள் நம்மை எளிதில் பாதித்து விடும்.இதற்கு தீர்வு தான் என்ன? என்று ஆராய்ந்தால் கிணற்று தண்ணீர் தான் சிறந்து.ஆனால் இந்த தண்ணீரை அனைவராலும் பயன்படுத்த முடியாது.யாரோ ஒருவர் வீட்டில் தான் தற்பொழுது கிணறு இருக்கிறது.இந்த தண்ணீர் உடலுக்கு ஆரோக்கியமானது என்றாலும் நாம் காவிரி ஆற்று தண்ணீரை குடித்து பழகி விட்டதால் வேறு எந்த தண்ணீரும் நமக்கு சுவையாக இருக்காது.
காவிரி ஆற்று நீரை குடிக்க பயன்படுத்தும் மக்கள் அதை மிதமான தீயில் சில நிமிடங்கள் சூடு செய்து ஆறவைத்து குடிக்கலாம்.

தினமும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் பருகுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்:-

*நாம் குடிக்கும் தண்ணீர் பூஜ்ஜியம் கலோரி கொண்டது என்பதால் அதை தினமும் குறைந்தது 3 லிட்டர் வரை குடித்து வந்தோம் என்றால் உடல் எடை விரைவில் குறைந்து விடும்.அதுமட்டும் அல்லாமல் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் தண்ணீர் பெரிதும் உதவுகிறது.

*மலசிக்கல் பாதிப்பால் அவதிப்படுபவர்கள் அதிகளவில் தண்ணீர் எடுத்து கொண்டால் அவை குடலை சுத்தப்படுத்தி அந்த பாதிப்பை விரைவில் சரி செய்துவிடும்.

*தினமும் காலையில் அதிகளவு தண்ணீர் பருகுவதால் முகத்தில் உள்ள பருக்கள்,கரும்புள்ளிகள் விரைவில் மறைந்து விடும்.இதனால் சரும பாதிப்புகள் நீங்கி முகம் பொலிவாகவும்,அழகாகவும் இருக்கும்.

*தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தோம் என்றால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.இதனால் பல்வேறு நோய்களில் இருந்து நம் உடலை காத்துக்கொள்ள முடியும்.

*காலையில் எழுந்ததும் வாயை சுத்தம் செய்து விட்டு 1 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம்.இதை தொடர்ந்து கடைபிடித்து வந்தோம் என்றால் சிறுநீர் பாதிப்பு,முடி உதிர்தல் உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும்.