சாகும் வரை “மூட்டு வலி” மற்றும் “முதுகு வலி” பாதிப்பு வராமல் இருக்க இந்த ஒரு பானம் மட்டும் பருங்குங்கள் போதும்!!

0
60
#image_title

சாகும் வரை “மூட்டு வலி” மற்றும் “முதுகு வலி” பாதிப்பு வராமல் இருக்க இந்த ஒரு பானம் மட்டும் பருங்குங்கள் போதும்!!

இன்றைய காலத்தில் ஆண் பெண் என்று வயதானவர்கள் முதல் இளம் வயது நபர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் பாதிப்பு மூட்டு வலி மற்றும் முதுகு வலி.இந்த பிரச்சனை உருவாகி விட்டால் சிறு வேலையை கூட செய்ய மிகவும் சிரமமாக இருக்கும்.இந்த மூட்டு வலி வயதானவர்களை அதிகம் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த தவறினால் ஆபத்தை சந்திக்க நேரிடும்.இந்த மூட்டு வலி மற்றும் முதுகு வலி நாளடைவில் அதிக படியான சோர்வு,எடை இழப்பு,மூட்டு எழும்புகளில் வலி,முதுகு தண்டு வடம் பாதித்தால் போன்றவற்றை ஏற்படுத்தும்.

அதேபோல் நாம் அனைவரும் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று முதுகு வலி.ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருதல்,முதுகு தண்டு வளைந்த படி உட்காருதல் போன்றவற்றால் ஏற்படுகிறது.எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாவிட்டாலும் இந்த முதுகு வலி பிரச்சனை ஏற்படும்.இவற்றை இயற்கை முறையில் சரி செய்ய எளிய வழிகள் பல இருக்கின்றது.இவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி முற்றிலும் குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

*பிரியாணி இலை – 2

*பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பவுலில் தண்ணீர் ஊற்றி அதில் 2 பிரியாணி(பிரிஞ்சி) இலைகளை கிள்ளி போட்டு இரவு முழுவதும் ஊற விடவும்.

அடுத்த நாள் காலையில் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் முந்தின நாள் இரவு ஊறவைத்த பிரியாணி இலை தண்ணீரை ஊற்றிக்கொள்ளவும்.மிதமான தீயில் கொதிக்க விடவும்.

அடுத்து 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்(சோம்பு) சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைத்து இந்த பானத்தை ஒரு டம்ளரில் வடிகட்டி பருகவும்.

மற்றொரு செய்முறை:-

தேவையான பொருட்கள்:-

*பால் – 1 டம்ளர்

*பிரியாணி இலை – 1

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் பால் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பின்னர் அதில் 1 பிரியாணி இலை கிள்ளி போட்டு கொதிக்க விடவும்.இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.