தினமும் வெந்தயம் ஊற வைத்த தண்ணீர் குடிப்பதினால் இத்தனை நன்மைகளை பெற முடியும்!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா?

0
74
#image_title

தினமும் வெந்தயம் ஊற வைத்த தண்ணீர் குடிப்பதினால் இத்தனை நன்மைகளை பெற முடியும்!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா?

தினசரி உணவில் வெந்தயத்தின் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.இந்த வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள்.இவை உடல் சூடு,வயிறு எரிச்சல்,வயிற்று வலி உள்ளிட்டவைகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.

இந்த வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.இந்த வெந்தயத்தில் நார்ச்சத்து,வைட்டமின் சி,புரதம்,மாங்கனீசு,மெக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் அடங்கி இருக்கிறது.இந்த வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

ஊறவைத்த வெந்தயத் தண்ணீரை பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்:-

*நெஞ்சு எரிச்சல்,அல்சர் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்படும் நபர்கள் தினமும் வெந்தயத் தண்ணீரை பருகுவது மிகவும் அவசியம்.இப்படி தொடர்ந்து பருகி வருவதன் மூலம் உடலும் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.

*செரிமான பிரச்சனை இருப்பவர்கள் 1 தேக்கரண்டி வெந்தயத்தை அப்படியே மென்று சாப்பிட வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் செரிமான பிரச்சனை,வாயு தொல்லை உள்ளிட்டவை சரியாகும்.அதேபோல் வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இது உரியத் தீர்வாக இருக்கும்.

*உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை பருக வேண்டும்.இரவு ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 தேக்கரண்டி அளவு வெந்தயம் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.பின்னர் அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை பருக வேண்டும்.

*வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் இருக்கிறது.இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

*அதேபோல் மூட்டு வலி,மூட்டு வீக்கம் உள்ளிட்ட பாதிப்புக்கும் வெந்தயத் தண்ணீர் சிறந்த தீர்வாக இருக்கும்.

*மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை சரி செய்வதில் வெந்தயத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது.1/2 தேக்கரண்டி வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதன் மூலம் இந்த பாதிப்பை சரி செய்ய முடியும்.

*கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதன் மூலம் குழந்தை பிறப்பின் போது சிக்கல் மற்றும் வலி இல்லாமல் இருக்கும்.

*வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அதை அரைத்து தலையில் தேய்த்து வர முடி நன்கு வளர்ச்சி அடையும்.கூந்தல் மிகவும் மிருதுவாக இருக்கும்.அது மட்டும் இன்றி பேன்,பொடுகு தொல்லைக்கும் இவை சிறந்த தீர்வாக இருக்கும்.

*தினசரி உணவில் வெந்தயத்தை சேர்த்து வருவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

*சரும பாதிப்புக்கும் வெந்தயம் சிறந்த தீர்வாக இருக்கும்.இந்த வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து சருமத்தில் தடவினால் மிகவும் பொலிவாக இருக்கும்.