தான் அம்மா ஆகப் போவதை உறுதி செய்த பிரபல பாலிவுட் நடிகை!

0
172
#image_title

தான் அம்மா ஆகப் போவதை உறுதி செய்த பிரபல பாலிவுட் நடிகை!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். முதலில் கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய தீபிகா தனது அயராத உழைப்பால் பாலிவுட்டில் நுழைந்தார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரன்பீர் கபூருடன் தீபிகாவிற்கு காதல் மலர்ந்தது. பிறகு மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின்னர் ‘ராம் லீலா’ என்ற படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ரன்வீர் சிஙகுடன் தீபிகா காதல் வயப்பட்டார்.

முதலில் நண்பர்களாக பழகி வந்த நிலையில் நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பாஜிராவ் மஸ்தானி ப்ளாக் பாஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் பத்மாவத், 83 ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர்.

2018 ஆம் ஆண்டு இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் புது புது படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா – ரன்வீர் சிங் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை குறித்து பதிவிட்டு இருக்கின்றனர். அதில் தங்கள் குழந்தையின் வருகையை வருகின்ற செப்டம்பர் 2024 இல் எதிர்பார்ப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். தீபிகா மற்றும் ரன்வீர் சிங்கின் இந்த பதிவால் அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.