சர்க்கரை நோயை 30 நாட்களில் துரத்தியடிக்க உதவும் அற்புத பானம்!!

0
51
#image_title

சர்க்கரை நோயை 30 நாட்களில் துரத்தியடிக்க உதவும் அற்புத பானம்!!

நவீன உலகில் அனைவரையும் எளிதில் தாக்கும் நோய் பதிப்பாக நீரிழிவு நோய் உள்ளது.
இந்த நீரிழிவு(சர்க்கரை) நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.

சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:-

பரம்பரை நோய், உடல் பருமன், மன அழுத்தம், அடிக்கடி கர்ப்பம் அடைதல், அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல், உயர் இரத்த அழுத்தம், இரத்த மிகை கொழுப்பு, சினைப்பை நீர்க்கட்டி
சோம்பலான வாழ்க்கை முறை.

சர்க்கரை நோய் அறிகுறிகள்:-

அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், அதிகப்படியான உடல் சோர்வு, தண்ணீர் தாகம் அதிகரித்தல்
கண் பார்வை மங்குதல், அதிகப்படியான தலைவலி.

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் கொத்தவரை:-

நாம் உண்ணும் காய்கறி வகைகளில் ஒன்று கொத்தவரை. இந்த காயில் பொரியல், வத்தல், குழம்பு உள்ளிட்ட உணவுகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த சீனி அவரையில் ஜூஸ் செய்து பருகினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

கொத்தவரையில் உள்ள சத்துக்கள்:-

பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது.

கொத்தவரை ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*கொத்தவரங்காய்

*எலுமிச்சம் பழம்

*தேன்

செய்முறை:-

கொத்தவரங்காய் 10 எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். அடுத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். அரைக்கும் பொழுது நுரையாக கொத்தவரங்காய் தண்ணீருடன் கலந்து நுரையாக வரும்.

பின்னர் இந்த கொத்தவரங்காய் சாற்றை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அரை எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ளவும். அடுத்து அதில் தேவையான அளவு துயத் தேன் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.