வயிற்றில் அடைபட்டு கிடக்கும் மலங்களை வெளியே தள்ளும் அற்புத பானம் – தயார் செய்வது எப்படி?

0
32
#image_title

வயிற்றில் அடைபட்டு கிடக்கும் மலங்களை வெளியே தள்ளும் அற்புத பானம் – தயார் செய்வது எப்படி?

நவீன காலத்தில் ஆரோக்யமான வாழக்கை என்பது மிகவும் அரிதாகி விட்டது.அரிசி,காய்கறி, பழங்கள் என்று அனைத்திலும் ரசாயனங்கள் நிறைந்து விட்டது.அதேபோல் வீட்டு முறை உணவை விட ஹோட்டல் உணவுகளை உண்ண பழகி விட்டதால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாகி பல இன்னல்களை நாம் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.இப்படி ஆரோக்கியமற்ற உணவு நம் உடலில் செரிமான பாதிப்பை ஏற்படுத்தி மலச்சிக்கல் பாதிப்பில் கொண்டு சேர்த்து விடுகிறது.இதனால் உடலில் பல்வேறு நோய் பாதிப்புகள் உருவாக எளிய வழியை நாம் வகுத்து விடுகிறோம்.எனவே இந்த தீராத மலச்சிக்கல் பாதிப்பை எளிதில் தீர்க்கும் பானம் ஒன்றை தயார் செய்து பருகி பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

சோம்பு – 1 தேக்கரண்டி

மிளகு – 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

தேன் – தேவைக்கேற்ப

செய்முறை:-

*ஒரு சுத்தமான மிக்ஸி ஜாரில் சோம்பு 1 ஸ்பூன் மற்றும் மிளகு 1/2 ஸ்பூன் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

*அதன் பின் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

*பிறகு அதில் அரைத்து வைத்துள்ள சோம்பு + மிளகு பொடியை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

*கொதிக்கும் பொழுது சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூளில் 1/4 ஸ்பூன் எடுத்து அதில் சேர்க்கவும்.

*அதன் பின் 2 டம்ளர் தண்ணீர் 1 டம்ளராக சுண்டி வந்த பின்னர் அடுப்பை அணைக்கவும்.

*பிறகு அதை ஒரு பவுலில் வடிகட்டி கொள்ளவும்.தேவைப்பட்டால் சுத்தமான தேன் 1 ஸ்பூன் கலந்து பருகலாம்.இந்த பானம் வயிற்றில் அடைபட்டு கிடந்த நாள்பட்ட மலங்களை 1 மணி நேரத்தில் முழுமையாக வெளியேற்றி விடும்.