மூச்சு பிடிப்பு மற்றும் வாயுத் தொல்லை ஒரு மணி நேரத்தில் நீங்க அற்புத வீட்டு வைத்தியம்!!

0
118
#image_title

மூச்சு பிடிப்பு மற்றும் வாயுத் தொல்லை ஒரு மணி நேரத்தில் நீங்க அற்புத வீட்டு வைத்தியம்!!

மூச்சு பிடிப்பு:-

மூச்சு பிடிப்பு என்பது சாதாரண பாதிப்பு அல்ல. ஒருவருக்கு மூச்சு பிடிப்பு ஏற்பட்டு விட்டால் அவரால் எளிதில் மூச்சு விட முடியாது. மூச்சு விடும் பொழுது எல்லாம் ஒரு வித வலி ஏற்படும். முதுகை அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.

இதற்கு முக்கிய காரணம் அதிகப்டியான எடை தூக்குதல், மார்பு எலும்புகளின் மேல் உள்ள தசை நார்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் இந்த மூச்சு பிடிப்பு பாதிப்பு ஏற்படும்.

வாயுத் தொல்லை:-

நம்மில் பலரை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கும் பாதிப்புகளில் ஒன்று வாயுத் தொல்லை. இந்த பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் பொது வெளியில் நடமாடுவது என்பது மிகவும் கடிமான ஒன்றாக இருக்கிறது. இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து விடுவது நல்லது.

வாயுத் தொல்லை ஏற்படக் காரணங்கள்:-

*செரிமானக் கோளாறு

*உடலில் உள்ள அமிலங்கள் அதிக அளவு சுரத்தல்

*மன அழுத்தம்

*முறையற்ற உணவு முறை பழக்கம்

மூச்சுப்பிடிப்பு மற்றும் வாயுத் தொல்லை நீங்க வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*சாதம் வடித்த கஞ்சி – சிறிதளவு

*சுக்கு பொடி – 1 தேக்கரண்டி

*பெருங்காயத் தூள் – 1/2 தேக்கரண்டி

*கட்டிக் கற்பூரம் – சிறிதளவு

செய்முறை:-

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைஒரு பவுலில் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதை நன்கு ஆறவிட்டால் கஞ்சி கெட்டித் தன்மை ஆகிவிடும். பின்னர் கெட்டி தன்மைக்கு வந்த கஞ்சியில் இருந்து 1 தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு பவுலில் ஊற்றிக் கொள்ளவும்.

அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு சுக்கு பொடிசேர்த்து நன்கு கலந்து விடவும். அடுத்து 1/2 தேக்கரண்டி அளவு பெருங்காயத் தூள் சேர்த்து மீண்டும் நன்கு கலந்து விடவும்.

பிறகு சிறிதளவு கட்டி கற்பூரத்தை உடைத்து அதில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் தயார் செய்து வைத்துள்ள கலவையை ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அடுப்பை அணைத்து இந்த கலவையை மூச்சு மற்றும் வாயு பிடித்திருக்கும் இடங்களில் தடவி விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் மூச்சு பிடிப்பு, வாயுத் தொல்லை மட்டும் இன்றி இடுப்பு வலி, முதுகு வலி உள்ளிட்டவைகளை சரியாகும்.