தேனி அருகே நகை அடகு கடையில் கொள்ளை அடிக்க முயற்சி!

0
145
#image_title

தேனி அருகே நகை அடகு கடையில் கொள்ளை அடிக்க முயற்சி.

நகைக்கடையின் அருகே இருந்த சிசிடிவி கேமராவை அடித்து நொறுக்கி சிசிடிவி கேமராவை எடுத்துச் சென்ற திருடன். சிசிடிவி காட்சிகள் உள்ளது.

தேனி அருகே உள்ள ஸ்ரீரங்கபுரம் கிராமத்தில் ஸ்ரீ சக்தி ரேணுகா என்ற பெயரில் நகை அடகு கடை செயல்பட்டு வருகிறது. இந்த அடகு கடையை பூட்டிவிட்டு அதன் உரிமையாளர் வீடு சென்ற நிலையில் இந்த அடகு கடையினை கொள்ளை அடிக்க திட்டமிட்ட வந்த ஒரு வாலிபர் தனது முகத்தை முழுமையாக மூடி அருகில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இங்கு நடப்பது அனைத்தும் பதிவாகும் என்பதை அறிந்த அந்த திருடன் ஏடிஎம் மையத்தில் வெளியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை இரும்பு கம்பியினால் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆள் நடமாட்டம் இருப்பதைக் கண்டு கண்காணிப்பு கேமராவை எடுத்துக்கொண்டு அந்த திருடன் தப்பி ஓடிவிட்டான்.

இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

author avatar
Savitha